விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!

2 weeks ago 3
ARTICLE AD
<p>விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காலால் எட்டி உதைத்து தள்ளி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p> <p><br /><br />விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். இவருடைய மனைவி மஞ்சுளா (54). இவர் புதுச்சேரியில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் சென்றுவிட்டு, இன்று காலை மீண்டும் விழுப்புரம் திரும்பியுள்ளார். புதுச்சேரியிலிருந்து வந்து இறங்கிய மஞ்சுளா, கீழ்ப்பெரும்பாக்கம் ரயில்வே குடியிருப்புப் பகுதி வழியாகத் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.</p> <p>தாக்கிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்:</p> <p><br />அவர் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்த இளைஞர்கள் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க தாலிச்சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துள்ளனர். அப்போது மஞ்சுளா சத்தம் போட முயன்றதால், நிலைகுலைந்த அந்த இளைஞர்கள் அவரைத் தங்களின் காலால் மிகக் கொடூரமாக எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர். இதில் மஞ்சுளா நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதற்குள் அந்த மர்ம நபர்கள் இருவரும் தங்க சங்கிலியுடன் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.</p> <p><br />போலீசார் தீவிர விசாரணை:</p> <p><br />வழிப்பறியால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, உடனடியாக அருகில் உள்ள விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.<br /><br />குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.</p> <p>விழுப்புரம் நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதியான கீழ்ப்பெரும்பாக்கத்தில், மக்கள் நடமாட்டம் உள்ள பட்டப்பகலில் பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற சம்பவம், அப்பகுதி பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாடும் பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Read Entire Article