விரைவு சேவை !! சொத்து பத்திர நகல் இனி நொடியில் உங்கள் கையில் !! ஆன்லைன் வசதி அறிமுகம்

1 month ago 8
ARTICLE AD
<p><strong>சொத்து பத்திரம் - புதிய விரைவு சேவை அறிமுகம்</strong></p> <p>தமிழகத்தில் 590 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக, பத்திரப் பதிவுகள் நடக்கின்றன. இந்த பணிகளை விரைவுபடுத்த, பல்வேறு புதிய வசதிகளை பதிவுத்துறை அறிமுகப்படுத்தி வருகிறது. சொத்தின் அசல் பத்திரத்தை தொலைத்தவர்கள் அல்லது அதை சரிபார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அதன் நகல் கேட்டு, சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகுவர். அங்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினால், நகல் கிடைக்க சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த காத்திருப்பு முறைக்கு பதிவுத் துறை முடிவு கட்டியுள்ளது.</p> <p><strong>இது குறித்து பதிவுத் துறை உயரதிகாரி கூறியதாவது ; </strong></p> <p>சொத்து பத்திரத்தின் நகல் தேவைப்படுவோர், தற்போது ஆன்லைன் முறையில், விண்ணப்பித்தால் போதும். அதில் தெரிவிக்கப்படும் கட்டணத்தை செலுத்திய சில நிமிடங்களில், அவர்களின், இ - மெயில் முகவரிக்கு, ஆவணத்தின் நகல், 'பி.டி.எப்.,' வடிவில் வந்து விடும்.</p> <p>சார் - பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் தலையீடு இல்லாமல், தானியங்கி முறையில் இந்த சேவை செயல்படும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்களின் விண்ணப்பத்தை யாரும் நிறுத்த முடியாது. முதற் கட்டமாக 1975 - ம் ஆண்டு முதல் தற்போது வரை பதிவான பத்திரங்களின் நகல் ஆவணங்களை உடனடியாக பெறலாம்.</p> <p>இதற்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 400 ரூபாய் வசூலிக்கப்படும். கடந்த 1975 - க்கு முந்தைய ஆண்டுகளின் பத்திரங்களுக்கும், இந்த வசதி விரைவில் விரிவு படுத்தப்படும். அதுவரை பழைய ஆவணங்கள் பெற விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.</p> <p>ஆனால் அந்த விண்ணப்பம் அதிகாரிகள் நடவடிக்கைக்கு செல்லும். புதிதாக சொத்து வாங்குவோர், அசல் ஆவணங்களின் உண்மை தன்மையை அறிய புதிய வசதியை பயன்படுத்தலாம் என இவ்வாறு அவர் கூறினார்.</p>
Read Entire Article