விடாது துரத்தும் ஏழரை.. ஆறே வாரத்தில் 5வது சம்பவம்.. கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து

6 months ago 5
ARTICLE AD
<p>ஆர்யன் ஏவியேஷன் நிறுவனம் கேதார்நாத்துக்கு இயக்கிய பெல் 407 ஹெலிகாப்டர் (பதிவு விடி-பிகேஏ) இன்று (15.06.2025) விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த விமானி, குழந்தை உள்பட 7 பேரும் உயிரிழந்தனர். கடந்த 6 வார காலத்தில் நடக்கும் 5ஆவது ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் இதுவாகும்.</p> <h2><strong>விடாது துரத்தும் ஏழரை:</strong></h2> <p>குப்தகாஷியில் இருந்து காலை 05:10 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர், ஸ்ரீ கேதார்நாத் ஹெலிபேடில் காலை 05:18 மணிக்கு தரையிறங்கியது. அது, மீண்டும் காலை 05:19 மணிக்கு குப்தகாஷிக்கு புறப்பட்டது. ஆனால், அந்த ஹெலிகாப்டர் காலை 05:30&ndash;05:45 மணிக்கு இடையில் கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.</p> <p>பள்ளத்தாக்கு நுழைவுப் பகுதியில் மோசமான வானிலை, அதிக மேகமூட்டம் ஆகியவை நிலவியதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, விமான விபத்து புலனாய்வு அலிவலகம் (AAIB-ஏஏஐபி) விரிவான விசாரணை நடத்தி விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து வருகிறது.</p> <h2><strong>ஆறே வாரத்தில் 5வது சம்பவம்:</strong></h2> <p>விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களின் மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி காலை 11:00 மணிக்கு உயர் நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தை நடத்தினார்.</p> <p>இதில், உத்தரகாண்ட்&nbsp;அரசின் மூத்த அதிகாரிகள், விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர், விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விபத்தை அடுத்து பின்வரும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:</p> <ul> <li>சார் தாம் யாத்திரைக்கான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.</li> <li>மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் இதேபோன்ற மோசமான வானிலை நிலைமைகளின் கீழ் வான்வழியாக பறந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அந்த இரு விமானிகளின் உரிமங்களும் ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.</li> <li>பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இப்பகுதியில் உள்ள அனைத்து சார்ட்டர், ஷட்டில் ஹெலிகாப்டர் செயல்பாடுகளும் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</li> <li>வான்வழி சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அனைத்து நிறுவனங்களுடனும், விமானிகளுடனும் ஆலோசித்து விரிவான ஆய்வை நடத்த உத்தராகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையமான யுசிஏடிஏ-வுக்கு (UCADA) உத்தரவிடப்பட்டுள்ளது.</li> <li>கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து ஹெலிகாப்டர் செயல்பாடுகளையும் தீவிரமாக மேற்பார்வையிடவும், யுசிஏடிஏ கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை ஆய்வு செய்யவும், அதிகாரிகளை உடனடியாக நியமிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.</li> </ul>
Read Entire Article