விஜய்க்கு ஆதரவாக பேசிய ரவி மோகன்..இன்ஸ்டாகிராமில் பொளந்து கட்டிய ஆர்த்தி

1 month ago 4
ARTICLE AD
<p>தவெக தலைவர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இப்படியான நிலையில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் அண்மையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டதால் விஜய் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இதற்கு ஆதரவாக நடிகர் ரவி மோகன் அண்மையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது ரவி மோகனின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.&nbsp;</p> <p>நடிகர் விஜயின் விவாகரத்து பிரச்சனை சென்றுகொண்டிருக்கும் போதே அவர் த்ரிஷாவுடன் பொது நிகழ்வில் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டார். இதனால் தவெக ஆதரவாளர்களே த்ரிஷா , சங்கீதா என இரு தரப்பாக பிரிந்துள்ளார்கள். விஜயை பலர்&nbsp; நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷாவுடன் ஒப்பிட்டும் பேசி வந்தார்கள். டிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார். இது தொடர்பாக ஆர்த்தி மற்றும் ரவி மோகன் இருவர் தரப்பிலும் வெவ்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. விவாகரத்து பெறுவதற்கு முன்பே ரவி மோகன் கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொடங்கினார். கெனிஷாவுடனான உறவு பற்றி ரவி மோகன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் நெருங்கிய உறவில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. விவாகரத்து விஷயத்தைப் பொறுத்தவரை விஜய் ரவி மோகனை பின்பற்றி இருப்பதாக பலர் கூறினர்.&nbsp;</p> <h2>ரவி மோகன் விஜய்க்கு ஆதரவு&nbsp;</h2> <p><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> த்ரிஷா சர்ச்சை பெரிதாக உருவெடுக்க ரவி மோகன் அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில் அவர் " பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள்<span class="s1">. </span>ஆனால் பல நேரங்களில் ஆண்கள்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள்<span class="s1">. </span>அதைக் கூட நம் நீதித்துறை புரிந்திருக்கிறது<span class="s1">. </span>ஒருநாள் என் மனதையும்<span class="s1">, </span>நான் நேசிக்கும் மக்களுக்காக செய்தவற்றையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்<span class="s1">. </span>தயவுசெய்து ஒருவரை அமைதியாக வாழ விடுங்கள்<span class="s1">; </span>உங்கள் தவறான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்<span class="s1">. </span>நான் என் பாதைக்குத் திரும்புகிறேன்" என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்</p> <h2>ஆர்த்தி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி&nbsp;</h2> <p>தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆர்த்தி " இதுவே விவாகரத்து முடிவுக்கு வரும் முன்பு ஆர்த்தி இன்னொரு ஆணுடன்&nbsp; மேட்சிங்கான உடையில் சென்றிருந்தால் இந்த உலகம் ஏற்றுக்கொண்டிருக்குமா. அப்படி செய்தபின் அவள் பெண்களே பாதிக்கப்படுபவர்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது என்றால் நாங்களும் இந்த மாதிரியான செயல்களை செய்யும் ஆண்களை குற்றம்சாடதான் செய்வோம். இது பெருமைக்குரிய விஷயமில்லை இது ஒரு கொடூரனமான செயல்" என்று ஆர்த்தி கூறியுள்ளார்</p> <p>&nbsp;</p>
Read Entire Article