விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி

1 week ago 2
ARTICLE AD
<h3><strong>அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம்</strong></h3> <p>அதிமுக எம்.எல்.ஏ- க்கள் 3 பேர் நேற்று தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெக - வில் இணைந்த நிலையில் , இன்று இசக்கி சுப்பையாவும் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்த பின்பு அமைச்சர்கள் செங்கோட்டையன் , புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">த வெக</a> - வில் இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து , சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்</p> <h3><strong>அப்போது பேசிய அவர் ;</strong></h3> <p>இந்தியாவின் வரலாற்றில் , தமிழகத்தின் வரலாற்றில் பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை காக்கின்ற ஒரு தலைவர் முதலமைச்சர் விஜய்.</p> <p>தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர். அவருடைய செயல்பாடுகளை தெரிந்ததற்கு பிறகு எல்லோரும் இணைந்து இருக்கிறார்கள் இது மகிழ்ச்சியான ஒன்று.&nbsp;</p> <h3><strong>குதிரை பேரம் நடைபெறவில்லை</strong></h3> <p>தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரைக்கும் குதிரை பேரம் எங்கும் நடைபெறவில்லை. குதிரை பேரம் நடத்தியது யாரென்று நாடு தெரிந்திருக்கிறது. திமுக ஆதரவோடு நான் முதலமைச்சர் ஆவேன் என்று தெரிவித்தது யார். அவரிடத்தில் பதில் கேட்டால் அது சரியாக இருக்கும்.&nbsp;</p> <h3><strong>அடுத்தடுத்து எம்.எல்.ஏ - க்கள் ராஜினாமா செய்கிறார்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு&nbsp;</strong></h3> <p>நானே ராஜினாமா செய்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். ஒரு மாதத்தில் ராஜினாமா செய்வது அவரவரின் விருப்பம்.&nbsp;</p> <h3><strong>தமிழகத்தின் சட்ட ஒழுங்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது என்ற கேள்விக்கு&nbsp;</strong></h3> <p>புதிய ஆட்சி வந்திருக்கிறது. 6 மாதங்களுக்கு நாங்கள் எந்த கருத்தும் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சி தெரிவித்தனர்.&nbsp;</p> <p>நாங்களும் பொறுத்திருந்து தான் ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் அவகாசம் தர வேண்டும். குற்றங்கள் நடைபெறுகின்ற போது உடனுக்குடன் அதிரடியான நடவடிக்கைகளும் முதலமைச்சராக எடுத்திருக்கிறார். குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார் அதற்கான நடவடிக்கை உரிய முறையில் எடுக்கப்படுகிறது.&nbsp;</p> <h3><strong>"டார்கெட் அதிமுக" என்ற அடிப்படையில் அதிமுகவில் உள்ளவர்களை தமிழக வெற்றி கழகத்தில் சேர்க்கிறீர்கள் என்ற விமர்சனம் உள்ளது என்ற கேள்விக்கு ;&nbsp;</strong></h3> <p>வயித்து வலிக்காரருக்கு கட்டிலை திருப்பி போட்டு படுத்தால் வயிற்று வலி சரியாகாது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அவர் (EPS) வயிற்று வலிக்காரராக உள்ளார்.</p> <p>கட்சியில் சேர்ந்து இருப்பவர்கள் என்னை சந்தித்தார்கள். நான் அவர்களை சந்தித்தேன் நான் யாரையாவது சேர்த்து இருக்கிறேனா ? 25 பேர் வருகின்ற போது நான் வந்திருக்கிறேனா ?</p> <p>எடப்பாடி பழனிச்சாமி என் மீது கோபத்தில் இருக்கிறார். நான் வெளியில் வந்த பிறகு அவர் சரிந்திருக்கிறார். அது தான் அவருக்கு வேதனை.&nbsp;</p> <p>அதிமுகவில் ஜனநாயகம் இல்லை எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை பெரிதாக வைத்தால் தான் சிரிக்கிறார். அம்மாவும் , தலைவர் படமும் இல்லாமல் அவருக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பாராட்டு விழா நடத்தும் போது அம்மாவின் புகைப்படமும் எம்.ஜி.ஆ ரின் படமும் இல்லாமல் என்னை பாராட்டினால் போதும் என நினைத்தார்.&nbsp;</p> <p>கொள்கை ரீதியாகவும் லட்சிய ரீதியாகவும் இயக்கத்தை காக்கும் நபர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.</p>
Read Entire Article