விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா.. ம.பி. முதல்வர் பங்கேற்பு!

1 year ago 7
ARTICLE AD
<p><span style="font-weight: 400;">மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா, கடந்த </span><span style="font-weight: 400;">வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4, 2024) நடைபெற்றது. </span><span style="font-weight: 400;">இவ்விழாவில் 1945 இளங்கலை பட்டதாரிகள், 328 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 14 பிஎச்.டி. பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. </span></p> <p><span style="font-weight: 400;">விஐடி போபால் பல்கலைக்கழகத்தின்&nbsp;வேந்தர் டாக்டர்&nbsp;</span><span style="font-weight: 400;">ஜி.விசுவநாதன் பட்டதாரிகளுக்கு உறுதிமொழி பிரமாணத்தை செய்து வைத்தார். </span><span style="font-weight: 400;">மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் இந்த மாபெரும் நிகழ்வின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் முன்னாள் மாநில கல்வி அமைச்சராகவும் இருந்தார். </span></p> <p><strong>விஐடி பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா:&nbsp;</strong></p> <p><span style="font-weight: 400;">மத்தியப் பிரதேச மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பையும்,வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் &ldquo;</span><span style="font-weight: 400;">Institute of Eminence&rdquo; </span><span style="font-weight: 400;">என இந்திய அரசு முன்மொழிந்ததையும் குறிப்பிட்டார். </span></p> <p><span style="font-weight: 400;">விஐடி போபாலில் பெற்றோர் தங்கள் மாணவரைச் சேர்த்தால், அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். முதலமைச்சர் தனது உரையில் மாணவர்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்த்திற்கு VIT Bhopal இன் 100% முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் பங்களிப்பை மிகவும் பாராட்டினார்.&nbsp; </span></p> <p><span style="font-weight: 400;">VIT Bhopal இன்அனைத்து ஆசிரியர்களும் வெவ்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். விஐடி போபால் பல்கலைக்கழகம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை உறுதி செய்கிறது என்றும் </span><span style="font-weight: 400;">பெருமைப்படுத்தினார்.</span></p> <p><strong>90% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு:</strong></p> <p><span style="font-weight: 400;">பிரதமர் நரேந்திர மோடியின் </span><span style="font-weight: 400;">&ldquo;VIKSHIT BHARAT&rdquo;</span><span style="font-weight: 400;">தொலைநோக்கு சிந்தனையைப் பற்றி கூறி இளம் மாணவர்களை தனது உரையில் ஊக்கப்படுத்தினார். </span><span style="font-weight: 400;">மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் வேந்தர்களை குல்பதி மற்றும் குல் குரு என இனி அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்தார்.</span></p> <p><span style="font-weight: 400;">இந்த நல்ல சந்தர்ப்பத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கான இரண்டு புதிய தங்கும் விடுதிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். </span><span style="font-weight: 400;">பட்டமளிப்பு விழாவில், வருவாய்த்துறை அமைச்சர் கரண் சிங் வர்மா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் (சுயேச்சை பொறுப்பு), கிருஷ்ணா கவுர், எம்.எல்.ஏ (Sehore) சுதேஷ் ராய், எம்.எல்.ஏ. கோபால் சிங் , MPPURC தலைவர், ஸ்ரீ பரத் ஷரன் சிங் மற்றும் உயர் கல்வி ஆணையர் ஸ்ரீ நிஷாந்த் வார்வேட், HCM முதல் OSD to IGP மற்றும் Sehore&nbsp; ஆட்சியாளர் மற்றும் பல அரசுகள் அதிகாரிகள். பங்கேற்றனர்.&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">கெளரவ விருந்தினரானக, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். ரவி பி. காந்தி, விஐடி போபாலில் மாணவர்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் முழுவதிலும் தனித்துவமாக இருப்பதை பாராட்டினார். அவர்களின் லட்சியத்திற்க்கும், குறிக்கோளுக்கும்&nbsp; உண்மையாக இருக்கவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் அவர் மாணவர்களை வலியுறுத்தினார்.</span></p> <p><span style="font-weight: 400;">VIT போபாலின் உதவித் துணைத் தலைவரான காதம்பரி எஸ். விசுவநாதன், தனது உரையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 90% மாணவர்க</span><span style="font-weight: 400;">ள்</span><span style="font-weight: 400;"> சிறப்பான வேலை வாய்ப்புகளை பெற்றதை குறிப்பிட்டார்.&nbsp;</span></p> <p><span style="font-weight: 400;">2024 ஆம் ஆண்டில் பொருளாதாரச் சவால்களை மீறி 87% வேலை வாய்ப்புகள் பெற்றதை பெருமையுடன் அறிவித்தார். ஆண்டு சம்பளம் ரூபாய்&nbsp; 50 லட்சத்துடன் நான்கு மாணவர்கள் Apple, Microsoft, Zomato போன்ற நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை பெற்றனர், மேலும் 60% மாணவர்கள் ட்ரீம் மற்றும் சூப்பர் ட்ரீம் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். பல்கலைக்கழகம் கடந்த மூன்று</span><span style="font-weight: 400;"> ஆண்டுகளாக சர்வதேச வேலை வாய்ப்புகளைப் உறுதிப்படுத்தி வருகிறது. இது உலக அளவில் தடம் பதித்திருப்பதை&nbsp; அறிவித்தார் .</span></p> <p><span style="font-weight: 400;">விஐடி போபாலின் ஸ்டார்ஸ் திட்டம் பற்றி காதம்பரி&nbsp; விசுவநாதன் பேசினார், இது மத்திய பிரதேச&nbsp; அரசுப் பள்ளிகளில் இருந்து மாவட்ட அளவில் முதன்மை இடம் பெற்ற&nbsp; மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி மற்றும் இலவச உறைவிடத்தை வழங்குகிறது. </span></p> <p><span style="font-weight: 400;">இந்த முயற்சியின் கீழ், கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த 74 மாணவிகள் மற்றும் 60 மாணவர்கள் வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்கியுள்ளனர், 2024 ஆம் ஆண்டில் ஒரு பட்டதாரி மைக்ரோசாப்ட் வழங்கும் ஆண்டிற்கு&nbsp; ₹51 லட்ச&nbsp; வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். பலர் AMD, Shell, Amazon மற்றும் JSW போன்ற நிறுவனங்களின்&nbsp; வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் வெற்றியானது இம்மாதிரியான வேலை வாய்ப்புகளின் மூலம் கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது.</span></p> <p>&nbsp;</p>
Read Entire Article