வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

8 months ago 6
ARTICLE AD
<p style="text-align: justify;"><strong>தஞ்சாவூர்:</strong> வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.&nbsp;</p> <p style="text-align: justify;">அதன்படி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று மத்திய மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் இரா.<a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>சரவணன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் எம்.எஸ்.வசந்த், சாய்ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டியன், தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p> <p style="text-align: justify;">இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.</p> <p style="text-align: justify;">இதில் தஞ்சை, திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் &nbsp;ஆபெல், ஆனந்த், சந்தோஷ், ஜெகதீசன், வீரமணி, கார்த்தி, ரஜினி , மாவட்ட நிர்வாகிகள் செந்தில், முருகேசன், பாரி, மெர்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள், கிளை, ஊராட்சி நிர்வாகிகள் , அனைத்து பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p> <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/04/04/fc266b96835f39683bbb987744ffde501743753804770733_original.jpg" width="720" /></p> <p style="text-align: justify;"><strong>திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம்</strong></p> <p style="text-align: justify;">வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் - 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்</p> <p style="text-align: justify;">நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த அறிவுறுத்தி இருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்டம் மாவட்டச் செயலாளர் சந்திரா &nbsp;தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.&nbsp;</p> <p style="text-align: justify;">ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எதுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
Read Entire Article