ரூ.5 கோடி வரை மானியத்துடன் கடன்! அறிய வாய்ப்பை தவறவிடாதீர்! முழுவிவரம் உள்ளே

3 months ago 4
ARTICLE AD
<h2>சுயதொழில் தொடங்கிட மானியம்!</h2> <p>விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் சுயதொழில் தொடங்கிட மானியத்தில் கடனுதவி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.</p> <p><strong>மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:</strong></p> <p>சுயதொழில் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு, நீட்ஸ், யூ.ஒய்.ஈ.ஜி.பி, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், பி.எம்.ஈ.ஜி.பி. மற்றும் பி.எம்.எப்.எம்.ஈ ஆகிய சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவிகளை வழங்கி வருகிறது.</p> <p>இத்திட்டங்களின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் தொழில் திட்டங்களுக்கு ரூ.5 கோடி வரை கடன் பெறலாம். பண்ணை சார் தொழில்கள் மற்றும் வாடகை வாகனங்கள் வாங்கி இயக்கவும் இத்திட்டங்களின் கீழ் கடன் பெறலாம். அரசு திட்டத்தொகையில் 15% முதல் 35% வரை மூலதன மானியமாக வழங்குகிறது. சில திட்டங்களின் கீழ் 3% முதல் 5% வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்துக்கும் தனியாக தகுதிகள் வரையறுகப்பய்ட்டிருப்பினும் பொதுவாக 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் தமக்கு ஆர்வமுள்ள நடைமுறையிலுள்ள சட்ட வரன்முறைகளுக்குட்பட்டு தொடங்கிட இத்திட்டங்களின் கீழ் பயன் பெறலாம்.</p> <h2>விண்ணப்பம் பதிவு&nbsp;</h2> <p>ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் தமது சொந்த அடையாள ஆவணங்கள், தொடங்கவுள்ள தொழில்களுக்கான திட்ட அறிக்கை, விலைப்புள்ளிகள் இவற்றோடு www.msmeonline.tn.gov.in அல்லது kviconline.gov.in/pmegp / pmfme.mofpi.gov.in இணைய தளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்தால் அவை உரிய பரிசீலனைக்குப் பின் தொழில் முனைவோர் தொழில் தொடங்கவுள்ள பகுதிக்குப் பொறுப்பான வங்கிக் கிளைக்கு பரிந்துரைக்கப்படும். வங்கி மேலாளர் தன் நிறுவன விதிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பத்தினைப் பரிசீலித்து கடன் வழங்குவது குறித்த முடிவை மேற்கொள்வார். கடன் வழங்க முன் வரும் உரிய மூலதன மானியமும் வட்டி மானியமும் வங்கி வழியாக பயனாளுக்குத் தரப்படும்.</p> <p>அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற்று தொழில் தொடங்குவதன் மூலம் சுய வேலைவாய்ப்பு பெறுவதோடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பங்களித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p> <h2>விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற...</h2> <p>இது குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தில் உள்ள பொது மேலாளர் அவர்களை அனுகலாம். மேலும், 04146-223616, 9443728015, 8925534035, 9698835117 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.</p>
Read Entire Article