<p>ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<h2><strong>ஊதியம் எவ்வளவு?</strong></h2>
<p>இதற்கு குறைந்தபட்ச தகுதியாக 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பாக, 42 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாத வருமானம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.</p>
<p><strong>தேர்வு முறை</strong></p>
<ul>
<li>மெரிட் பட்டியல்</li>
<li>நேர்காணல்</li>
</ul>
<p><strong>விண்ணப்பிப்பது எப்படி?</strong></p>
<p><a href="https://erode.nic.in/notice_category/recruitment/">https://erode.nic.in/notice_category/recruitment/</a> என்ற இணைப்பை க்ளிக் செய்து, எந்தெந்த தாலுக்காவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிந்து அதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.</p>
<p>பவானி தாலுக்கா, பெருந்துறை, கோபிச்செட்டி பாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி, ஈரோடு, தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், அந்தியூர் தாலுக்காக்களில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p>
<h2><strong>என்னென்ன ஆவணங்கள் தேவை?</strong></h2>
<p> 1. கல்விச் சான்று நகல் (10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ்)</p>
<ol start="2">
<li>சாதிச்சான்று நகல்</li>
<li>இருப்பிடச் சான்று நகல்</li>
<li>ஆதார் அட்டை நகல்</li>
<li>வாக்காளர் அடையாள அட்டை நகல்</li>
<li>குடும்ப அட்டை நகல்</li>
<li>முன்னுரிமை கோருபவராயின் அதற்கான சான்று நகல்</li>
<li>ஓட்டுநர் உரிமை இருப்பின் அதன் நகல்</li>
<li>வேலை வாய்ப்பு பதிவு அட்டை இருப்பின் அதன் நகல்</li>
</ol>
<p>இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை <a href="https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2025/07/2025070799.pdf">https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2025/07/2025070799.pdf</a> என்ற இணைப்பை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.</p>
<p><strong>கூடுதல் தகவல்களுக்கு: <a href="https://erode.nic.in/">https://erode.nic.in/</a></strong></p>