ரியல் எஸ்டேட் தொழிலதிபரை போட்டுத்தள்ளிய மனைவியும் மாமியாரும்! ஏன் தெரியுமா?

8 months ago 6
ARTICLE AD
<p>பெங்களூருவில் கடந்த வாரம் 37 வயதான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், அவரது மனைவி மற்றும் மாமியாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மனைவியும் மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p> <p>பெங்களூர் சிக்கபனாவராவில் கார் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் காரை திறந்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒருவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது.</p> <p>இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.</p> <p>விசாரணையில் உயிரிழந்தவர் பெங்களூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் லோக்நாத் சிங் என்பது தெரியவந்தது.</p> <p>இதுகுறித்து வடக்கு பெங்களூரு துணை காவல் ஆணையர் சைதுல் அதாவத் கூறுகையில், &ldquo;சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 112 என்ற எண்ணில் எங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்தது. அதில் சடலம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. குற்றத்திற்காக அவரது மனைவி மற்றும் மாமியாரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது.</p> <p>விசாரணையின் முதல் கட்டமாக உயிரிழந்தவருக்கு அவரது மனைவி முதலில் உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் அவரது தொண்டையை அறுத்து தப்பிச் சென்றுள்ளனர்&rdquo; எனத் தெரிவித்தார்.</p> <p>கொலை செய்யப்பட்டவர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகவும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் காரணமாகவும் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.</p> <p>லோக்நாத் சிங் ஒரு பெண்ணுடன் 2 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். வயது வித்தியாசத்தால் இருவரின் திருமணத்திற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p> <p>ஆனால் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் லோக்நாத் விட்டுச் சென்றுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.</p> <p>கடந்த வாரம் தான் பெண்ணின் பெற்றோருக்கு திருமணம் குறித்து தெரியவந்துள்ளது. மேலும், இந்த நேரத்தில்தான் லோக்நாத்தின் மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தினர் அவரது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மற்றும் சட்டவிரோத வணிக பரிவர்த்தனைகள் பற்றி அறிந்து கொண்டதாக தெரிகிறது.</p> <p>இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரத்தொடங்கியுள்ளது. மேலும் மனைவியையும் மாமியாரையும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என லோக்நாத் எச்சரித்ததாக கூறப்படுகிறது.</p> <p>இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும் மாமியாரும் லோக்நாத்தை தீர்த்து கட்ட ஒரு சதித் திட்டத்திட்டத்தை தீட்டியுள்ளனர். அதன்படி இந்த கொலையை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article