மே 19 முதல் 10, 11ஆம் வகுப்பு மார்க் ஷீட்; 20 முதல் விடைத்தாள் நகல்- பெறுவது எப்படி?

7 months ago 5
ARTICLE AD
<p>10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மே 20 முதல் விடைத்தாள் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.</p> <p><strong>இதுகுறித்து டிஜிஇ எனப்படும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:</strong></p> <p>மார்ச்&zwnj; / ஏப்ரல்&zwnj; &ndash; 2025-ல் நடைபெற்ற பத்தாம்&zwnj; வகுப்பு மற்றும்&zwnj; மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண்&zwnj; சான்றிதம்&zwnj; / மதிப்பெண்&zwnj; பட்டியல்&zwnj; வழங்குதல்&zwnj;/விடைத்தாள்&zwnj; நகல்&zwnj; கோரி விண்ணப்பித்தல்&zwnj; / ஜூலை 2025 துணைத்தேர்வுகள்&zwnj; நடத்துதல்&zwnj; குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. &zwnj;</p> <p>பத்தாம்&zwnj; வகுப்பு மாணாக்கர்களுக்கு மேல்நிலைக் கல்விக்கு விண்ணப்பிக்கத்&zwnj; தேவையான தற்காலிக மதிப்பெண்&zwnj; சான்றிதழ்&zwnj; (Provisional Certificate) மற்றும்&zwnj; மேல்நிலை முதலாமாண்டு (+1) மாணாக்கர்களுக்கு மதிப்பெண்&zwnj; பட்டியல் (Statement of Marks) ஆகியவற்றை 19.05.2025 முதல்&zwnj; www.dge.tn.gov.in இணையதளத்தில்&zwnj;பதிவிறக்கம்&zwnj; செய்து கொள்ளலாம்&zwnj;.</p> <h2><strong>மே 20 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்</strong></h2> <p>பத்தாம்&zwnj; வகுப்பு மற்றும்&zwnj; மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்கள்&zwnj; தங்களது விடைத்தாள்&zwnj; நகல்&zwnj; கோரி (copy of Answer sheets) 20.05.2025 முதல்&zwnj; 24.05.2025 வரை தாங்கள்&zwnj; பயின்ற பள்ளியின்&zwnj; வாயிலாக விண்ணப்பிக்கலாம்&zwnj;.</p> <p>* தேர்வில்&zwnj; தேர்ச்சி பெறாத /வருகை புரியாத மாணாக்கர்களின்&zwnj; எதிர்கால நலன் கருதி பத்தாம்&zwnj; வகுப்பு மற்றும்&zwnj; மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வினை 04.07.2025 முதல்&zwnj; நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கால அட்டவணை 16.05.2025 அன்று வெளியிடப்படும்&zwnj;.</p> <h2><strong>துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?</strong></h2> <p>* துணைத் தேர்விற்கு பள்ளி மாணாக்கர்கள்&zwnj; தாங்கள்&zwnj; பயின்ற பள்ளிகள்&zwnj; வாயிலாகவும்&zwnj; தனித் தேர்வர்கள்&zwnj; அரசுத் தேர்வுகள்&zwnj; இயக்கக சேவை மையங்களிலும்&zwnj; 22.05.2025 முதல்&zwnj; 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்&zwnj; என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.</p>
Read Entire Article