<p>10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மே 20 முதல் விடைத்தாள் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.</p>
<p><strong>இதுகுறித்து டிஜிஇ எனப்படும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளதாவது:</strong></p>
<p>மார்ச்‌ / ஏப்ரல்‌ – 2025-ல் நடைபெற்ற பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதம்‌ / மதிப்பெண்‌ பட்டியல்‌ வழங்குதல்‌/விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்தல்‌ / ஜூலை 2025 துணைத்தேர்வுகள்‌ நடத்துதல்‌ குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ‌</p>
<p>பத்தாம்‌ வகுப்பு மாணாக்கர்களுக்கு மேல்நிலைக் கல்விக்கு விண்ணப்பிக்கத்‌ தேவையான தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ (Provisional Certificate) மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு (+1) மாணாக்கர்களுக்கு மதிப்பெண்‌ பட்டியல் (Statement of Marks) ஆகியவற்றை 19.05.2025 முதல்‌ www.dge.tn.gov.in இணையதளத்தில்‌பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.</p>
<h2><strong>மே 20 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்</strong></h2>
<p>பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்கள்‌ தங்களது விடைத்தாள்‌ நகல்‌ கோரி (copy of Answer sheets) 20.05.2025 முதல்‌ 24.05.2025 வரை தாங்கள்‌ பயின்ற பள்ளியின்‌ வாயிலாக விண்ணப்பிக்கலாம்‌.</p>
<p>* தேர்வில்‌ தேர்ச்சி பெறாத /வருகை புரியாத மாணாக்கர்களின்‌ எதிர்கால நலன் கருதி பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வினை 04.07.2025 முதல்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கால அட்டவணை 16.05.2025 அன்று வெளியிடப்படும்‌.</p>
<h2><strong>துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?</strong></h2>
<p>* துணைத் தேர்விற்கு பள்ளி மாணாக்கர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகள்‌ வாயிலாகவும்‌ தனித் தேர்வர்கள்‌ அரசுத் தேர்வுகள்‌ இயக்கக சேவை மையங்களிலும்‌ 22.05.2025 முதல்‌ 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.</p>