முதியவரை தாக்கிய அதிகாரிகள் - அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

3 months ago 4
ARTICLE AD
<p style="text-align: left;">நியாயம் கேட்ட அப்பாவி முதியவர் மீது தாக்குதல், உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா? அல்லது அடித்து, உதைத்து விரட்டுவதற்கா? என&nbsp;பா.ம.க. &nbsp;தலைவர் &nbsp;மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுபியுள்ளார்.</p> <p style="text-align: left;">இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p> <p style="text-align: left;">இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தை அடுத்த சாத்தூர் கிராமத்தில் &nbsp;நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், &nbsp;தமது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வினா எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியும், காவல் உதவி ஆய்வாளரும் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மனிதத் தன்மையற்ற இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.</p> <p style="text-align: left;">ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் &nbsp;சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உங்களுடன் &nbsp;ஸ்டாலின் &nbsp;முகாமில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால், பல நாள்களாலியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற &nbsp;உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்ற &nbsp;சென்ற &nbsp;முதியவர் திருவேங்கடம், அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். &nbsp;மேலும் &nbsp;தமது மனுவை பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார்.</p> <p style="text-align: left;">இதை சகித்துக் கொள்ள முடியாத &nbsp;கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்கு துணையாக வந்த அதிகாரிகளும் &nbsp;பெரியவர் &nbsp;வேங்கடபதியை அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு வந்த &nbsp;காவல் உதவி ஆய்வாளரும் அந்த முதியவரை &nbsp;மார்பில் குத்தி விரட்டியடித்துள்ளார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மனு கொடுக்க வந்த முதியவரை &nbsp;அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.</p> <p style="text-align: left;">உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அது ஊரை ஏமாற்றும் திட்டம் &nbsp;என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து &nbsp;இன்று வரை 35 லட்சம் பேர் மனு அளித்துள்ள நிலையில், அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் கூடுதலான மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. &nbsp;20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் &nbsp;உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், முகாம்கள் தொடங்கி 50 நாள்களாகியும் இதுவரை ஒருவருக்குக் கூட உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அப்பட்டமான படுதோல்வி என்பதற்கு இவை தான் சான்றாகும்.</p> <p style="text-align: left;">மனு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று எவரேனும் கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் &nbsp;தண்டிக்கப்பட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உத்வி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தானே தவிர, &nbsp;கேள்வி கேட்பவர்களை அடித்து உதைப்பதற்கான &nbsp;திட்டம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதிகாரத் திமிருடன் &nbsp;மக்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article