மாதாமாதம் உதவித்தொகை: கவின்கலை, இசை, சிற்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

1 year ago 6
ARTICLE AD
<p>கலை பண்பாட்டுத்&zwnj; துறையின்&zwnj; கீழ்&zwnj; செயல்படும்&zwnj; பள்ளிகள்&zwnj; மற்றும்&zwnj; கல்லூரிகளில்&zwnj; மாணவ/ மாணவியர்&zwnj; சேர்க்கை&zwnj; தொடங்கி உள்ளது.</p> <p>இதுகுறித்துக் கலை பண்பாட்&zwnj;டுத் துறை இயக்குநர்&zwnj; அறிவித்து உள்ளதாவது:</p> <p>&rsquo;&rsquo;தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்&zwnj; துறையின்&zwnj; கீழ்&zwnj; தமிழ்நாட்டில்&zwnj; 17 மாவட்டங்களில்&zwnj; இசைப் பள்ளிகள்&zwnj;, நான்கு இடங்களில்&zwnj; இசைக்&zwnj; கல்லூரிகள்&zwnj;, இரண்டு கவின்&zwnj; கலைக்&zwnj; கல்லூரிகள்&zwnj; மற்றும்&zwnj; ஒரு சிற்பக்&zwnj; கல்லூரி ஆகியவை செயல்படுகின்றன. இக்கல்வியகங்களில்&zwnj; 2024-2025 ஆம்&zwnj; கல்வியாண்டிற்கான மாணவ/மாணவியர்&zwnj; சேர்க்கை தொடங்கியுள்ளது.</p> <h2><strong>மாதாந்திர கல்வி உதவித்&zwnj; தொகை</strong></h2> <p>காஞ்சிபுரம்&zwnj;, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம்&zwnj;, ஈரோடு, விழுப்புரம்&zwnj;, கடலூர்&zwnj;, மயிலாடுதுறை (சீர்காழி), திருவாரூர்&zwnj;, திருச்சிராப்பள்ளி, கரூர்&zwnj;, பெரம்பலூர்&zwnj;, புதுக்கோட்டை, இராமநாதபுரம்&zwnj;. சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில்&zwnj; இசைப் பள்ளிகள்&zwnj; செயல்படுகின்றன. இப்பள்ளிகளில்&zwnj; மூன்று ஆண்டு சான்றிதழ்&zwnj; படிப்பில்&zwnj; தேர்ச்சி பெறும்&zwnj; மாணாக்கர்கள்&zwnj; அரசு இசைக்&zwnj; கல்லூரியில்&zwnj; நேரடியாக மூன்றாம்&zwnj; ஆண்டில்&zwnj; டிப்ளமோ வகுப்பில்&zwnj; சேருவதற்கு அரசு அனுமதியளித்து ஆணையிட்டுள்ளது. இசைப் பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; மாணவர்களுக்கு மாதம்&zwnj; ரூ.400/- கல்வி உதவித்&zwnj; தொகை அளிக்கப்படுகிறது.</p> <p>சென்னை, கோயம்புத்தூர்&zwnj;, திருவையாறு, மதுரை ஆகிய இடங்களில்&zwnj; அரசு இசைக் கல்லூரிகள்&zwnj; செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில்&zwnj; இசை, நாட்டியம்&zwnj; ஆகிய பிரிவுகளில்&zwnj; பட்டப் படிப்புகளும்&zwnj; மேற்காண்&zwnj; கலைகளோடு கிராமியக்&zwnj; கலைகளில்&zwnj;பட்டயப் படிப்புகளும்&zwnj; உள்ளன. இசைக் கல்லூரிகளில்&zwnj; பயிலும்&zwnj; மாணாக்கர்களுக்கு மாதம்&zwnj; ரூ.500/- கல்வி உதவித்&zwnj; தொகை அளிக்கப்படுகிறது.</p> <p>சென்னை மற்றும்&zwnj; கும்பகோணம்&zwnj; ஆகிய இடங்களில்&zwnj; செயல்படும்&zwnj; அரசு கவின்&zwnj; கலைக்கல்லூரிகளில்&zwnj; ஓவியக்கலை சார்ந்த பிரிவுகளில்&zwnj; இளங்கலைப்&zwnj; பட்டம்&zwnj; மற்றும்&zwnj; முதுகலை பட்டப்படிப்புகளும்&zwnj;, மாமல்லபுரத்தில்&zwnj; செயல்படும்&zwnj; அரசினர்&zwnj; கட்டடக்&zwnj; கலை மற்றும்&zwnj; சிற்பக்&zwnj; கலைக்&zwnj; கல்லூரியில்&zwnj; சிற்பக்கலையில்&zwnj; இளங்கலைப்&zwnj; பட்டம்&zwnj; மற்றும்&zwnj; கோவில்&zwnj; கட்டடக்&zwnj; கலையில்&zwnj; பி.டெக்&zwnj; படிப்புகளும்&zwnj; உள்ளன.</p> <h2><strong>மாணவர் சேர்க்கை தொடக்கம்</strong></h2> <p>இக்கல்வியகங்களில்&zwnj; 2024-2025 ஆம்&zwnj; கல்வி ஆண்டுக்கான சேர்க்கை (Admission) தொடங்கியுள்ளது. பள்ளிகள்&zwnj; மற்றும்&zwnj; கல்லூரிகளில்&zwnj; உள்ள படிப்புகள்&zwnj; விவரம்&zwnj;, வயது வரம்பு மற்றும்&zwnj; கல்வித்&zwnj; தகுதி விவரங்களை <a href="http://www.artandculture.tn.gov.in">www.artandculture.tn.gov.in</a> என்ற இணையதளத்தில்&zwnj; காணலாம்&zwnj;. மேற்காண்&zwnj; ஏழு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்&zwnj; இந்த இணையதளத்தின்&zwnj; வாயிலாகவும்&zwnj; விண்ணப்பிக்கலாம்&zwnj;&rsquo;&rsquo; என கலை பண்பாட்டுத்துறை இயக்குநர்&zwnj; காந்தி தெரிவித்து உள்ளார்&zwnj;.</p> <p>கூடுதல் தகவல்களுக்கு: <a href="http://www.artandculture.tn.gov.in">www.artandculture.tn.gov.in</a>&nbsp;</p>
Read Entire Article