மருத்துவ துறையில் அரசு வேலை ! செப்டம்பர் 13 கடைசி தேதி: மிஸ் பண்ணிடாதீங்க!

3 months ago 4
ARTICLE AD
<p>கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.</p> <h2>ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு</h2> <p>கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப, மாவட்ட நலவாழ்வு சங்கம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த அறிவிப்பின் (எண்: 2988/NHM/18/2025) கீழ் மொத்தம் 9 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p> <h2><strong>பணியிட விவரங்கள்:</strong></h2> <ul> <li><strong>மருத்துவ ஆலோசகர்:</strong> 2 காலியிடங்கள் (சம்பளம்: மாதம் ரூ. 40,000). <strong>கல்வி தகுதி:</strong> BYNS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.</li> <li><strong>ஆண் சிகிச்சை உதவியாளர்:</strong> 1 காலியிடம் (சம்பளம்: மாதம் ரூ. 15,000). <strong>கல்வி தகுதி</strong>: +2 தேர்ச்சியுடன் நர்சிங் தெரபிஸ்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.</li> <li><strong>பெண் சிகிச்சை உதவியாளர்:</strong> 1 காலியிடம் (சம்பளம்: மாதம் ரூ. 15,000). <strong>கல்வித்தகுதி</strong>: +2 தேர்ச்சியுடன் நர்சிங் தெரபிஸ்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.</li> <li><strong>மருந்து வழங்குபவர்:</strong> 2 காலியிடங்கள் (சம்பளம்: மாதம் ரூ. 15,000). <strong>கல்வித்தகுதி</strong>: +2 தேர்ச்சியுடன் டிப்ளமோ பார்மசி (ஆயுஷ்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.</li> <li><strong>உதவியாளர்:</strong> 2 காலியிடங்கள் (சம்பளம்: மாதம் ரூ. 10,000). <strong>கல்வித்தகுதி</strong>: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர், ஆனால் தமிழில் தெளிவாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.</li> <li><strong>பல்நோக்குப் பணியாளர்:</strong> 1 காலியிடம் (சம்பளம்: மாதம் ரூ. 10,000). <strong>கல்வித்தகுதி</strong>: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர், ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.</li> </ul> <h2><strong>தேர்வு செய்யப்படும் முறை:</strong></h2> <p>விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.</p> <h2><strong>விண்ணப்பிக்கும் முறை:</strong></h2> <p>விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், கடலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான <strong>www.cuddalore.nic.in</strong> இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.</p> <h2><strong>விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:</strong></h2> <p>உறுப்பினர் செயலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர் மாவட்டம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் <strong>செப்டம்பர் 13, 2025</strong> ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.</p> <p>&nbsp;</p>
Read Entire Article