மத்திய அரசின் ராஷ்ட்ரிய பால்‌ புரஸ்கார்‌ விருது; ஜூலை 31 கடைசி- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

1 year ago 7
ARTICLE AD
<p>பிரதான்&zwnj; மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்&zwnj; விருதுக்கு ஜூலை 31-ம்&zwnj; தேதிக்குள்&zwnj; விண்ணப்பிக்கலாம்&zwnj; என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்&zwnj; ரஷ்மி சித்தார்த்&zwnj; ஜகடே தெரிவித்துள்ளார்&zwnj;</p> <p>மத்திய மகளிர்&zwnj; மற்றும்&zwnj; குழந்தைகள்&zwnj; மேம்பாட்டு அமைச்சகம்&zwnj;, ஆண்டுதோறும்&zwnj; 'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால்&zwnj; புரஸ்கார்&zwnj;' விருதை வழங்குகிறது. இது தன்னலமற்ற செயல்களைச்&zwnj; செய்த குழந்தைகளுக்கும்&zwnj;, வீர தீர செயல்களைச் செய்த சிறந்த சாதனைகள்&zwnj; கொண்ட சிறு குழந்தைகளுக்கும்&zwnj; உரிய அங்கீகாரம்&zwnj; அளிக்கிறது.</p> <p>ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல்&zwnj;, தொழில்நுட்பம்&zwnj; ஆகிய துறைகளில்&zwnj; சமூகத்தில்&zwnj; பரவலான மற்றும்&zwnj; வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால்&zwnj; புரஸ்கார்&zwnj; விருது வழங்கப்படுகிறது. 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது &nbsp;வழங்கப்பட்டு வருகிறது.&nbsp;</p> <p>இந்த விருது பெறுபவர்கள்&zwnj; ஒவ்வொரு ஆண்டும்&zwnj; டிசம்பர்&zwnj; 26-ம்&zwnj; தேதி 'வீர்&zwnj; பால்&zwnj; திவாஸ்&zwnj;' அன்று அறிவிக்கப்படுவார்கள்&zwnj;. அந்த வகையில் கடந்த ஆண்டு கலை, கலாச்சாரப் பிரிவில் 4 பேருக்கும், துணிச்சல், சமூக சேவை பிரிவில் தலா ஒருவருக்கும், புத்தாக்கம் பிரிவில் 2 பேருக்கும், &nbsp;விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும் என இந்தியா முழுவதும் இருந்து 11 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.&nbsp;</p> <p>இந்த நிலையில் இந்த ஆண்டுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p> <p><strong>என்ன தகுதி?</strong></p> <p>இந்த விருதை பெற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். &nbsp; &nbsp;இந்தியாவில்&zwnj; வசிப்பவராகவும்&zwnj;, 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்&zwnj; வேண்டும்&zwnj;.</p> <p><strong>விண்ணப்பிப்பது எப்படி?</strong></p> <p>* விண்ணப்பிக்க விரும்புவோர் என்ற awards.gov.in இணையதளத்தில்&zwnj; வரும்&zwnj; 2024 ஜூலை 31-ம்&zwnj; தேதிக்குள்&zwnj; விண்ணப்பிக்க வேண்டும்&zwnj;.</p> <p>* விண்ணப்பப்&zwnj; படிவத்தில்&zwnj; குறிப்பிடப்பட்டுள்ளபடி, துணை ஆவணங்களுடன்&zwnj;ஆன்லைன்&zwnj; விண்ணப்பப்&zwnj; படிவத்தின்படி, விவரங்களுடன்&zwnj; மகளிர் மற்றும்&zwnj;குழந்தைகள்&zwnj; மேம்பாட்டு அமைச்சகத்திடம்&zwnj; பரிந்துரைகள்&zwnj; சமர்ப்பிக்கப்படும்&zwnj;.</p> <p>* முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்&zwnj; மட்டுமே பரிசீலிக்கப்படும்&zwnj;.</p> <p>மேலும்&zwnj; தகவல்களுக்கு, பிரதான்&zwnj; மந்திரி ராஷ்ட்ரிய பால்&zwnj; புரஸ்கார்&zwnj; (PMRBP) க்கான வழிகாட்டுல்களை அறிய <strong>awards.gov.in</strong> என்ற அதிகாரப்பூர்வ&nbsp;வலைத்தளத்தைப்&zwnj; பார்வையிடலாம்&zwnj;.</p> <p>இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்&zwnj; ரஷ்மி சித்தார்த்&zwnj; ஜகடே, தெரிவித்துள்ளார்&zwnj;</p>
Read Entire Article