<p>மணிப்பூரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர், அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடினார்.</p>
<p><strong>பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தி: </strong>கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் அங்கு கலவரங்களும் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இனக்கலவரம் வெடித்த பிறகு, மூன்றாவது முறையாக ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார. கலவரம் வெடித்த சில வாரங்களிலேயே அவர் சென்றிருந்தார்.</p>
<p>இதையடுத்து, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக சென்றார். மணிப்பூரில் சென்று இறங்கியதுமே, ஜிரிபாம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பார்வையிட்டார்.</p>
<p>ராகுல் காந்தியின் பயணம் குறித்து பேசிய மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா, "ஜிரிபாமில் உள்ள மக்கள், தாங்களுக்கு நேர்ந்தவற்றை ராகுல் காந்தியிடன் கூறினார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதையும் கேட்டறிந்தார்.</p>
<p>பிரதமரோ, முதலமைச்சரோ தங்களைப் பார்க்க வரவில்லை என்று ஒரு சிறுமி ராகுல் காந்தியிடம் கூறினார். இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அவரை வலியுறுத்தினார்கள். ஜிரிபாமில் ராகுல் காந்தியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்களில் பலர் அவருடன் அழுதபடியே பேசினர்.</p>
<p>ஜிரிபாமில் இருந்து, அசாமில் உள்ள சில்சார் வழியாக இம்பால் விமான நிலையத்திற்கு வந்து, சாலை வழியாக சுராசந்த்பூர் மாவட்டம் துய்போங் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமை வந்தடைந்தார்.</p>
<p>மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் களத்தில் நிலவும் நிலைமையை ஆராய்வதற்காகவும் ராகுல் காந்தி மணிப்பூர் வந்துள்ளார். சமீபத்திய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான கட்சியின் உறுதிப்பாட்டை அவரது வருகை பிரதிபலிக்கிறது" என்றார்.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">LoP Shri <a href="https://twitter.com/RahulGandhi?ref_src=twsrc%5Etfw">@RahulGandhi</a> visits the relief camp at Phubala High School in Moirang, where he meets victims of the Manipur violence and offers support during these challenging times.<br /><br />📍 Manipur <a href="https://t.co/oA4jBAhLJe">pic.twitter.com/oA4jBAhLJe</a></p>
— Congress (@INCIndia) <a href="https://twitter.com/INCIndia/status/1810279113728336148?ref_src=twsrc%5Etfw">July 8, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>இதையடுத்து, இம்பாலில் மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி வெடித்த இனக்கலவரத்தால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p>
<p> </p>