போத்தீஸ் ஜவுளி கடையில் பரபரப்பு! வருமான வரித்துறை அதிரடி சோதனை: ஆவணங்கள் சிக்கின!

3 months ago 6
ARTICLE AD
<p style="text-align: left;">மதுரை மேலமாசி வீதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை - ஆவணங்களை கைப்பற்றி விசாரணை - காவல்துறை பாதுகாப்பு.</p> <div dir="auto" style="text-align: left;"><strong>வருமான வரி துறை தாக்கல் தொடர்பான ஆவணங்களை சோதனையிட்டு வருகின்றனர்</strong></div> <div dir="auto" style="text-align: left;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: left;">மதுரை மாநகர் மேலமாசி வீதி பகுதியில் உள்ள போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜவுளி விற்பனை நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 7.30&nbsp; மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் போத்தீஸ் நிறுவனத்தில் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் நடைபெற்ற விற்பனை மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை சோதனையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும்&nbsp; வருமான வரி துறை தாக்கல் தொடர்பான ஆவணங்களை சோதனையிட்டு வருகின்றனர்.</div> <div dir="auto" style="text-align: left;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: left;"><strong>ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்</strong></div> <div dir="auto" style="text-align: left;">&nbsp;</div> <div dir="auto" style="text-align: left;">வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவதன் காரணமாக போத்தீஸ் நிறுவனத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினரின் சோதனை காரணமாக போத்தீஸ் நிறுவனத்தின் முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வரும் வருமான வரித்துறையினரின் சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என தகவல் வெளியாகியுள்ளது</div> <div style="text-align: left;">&nbsp;</div>
Read Entire Article