பொய் வேடமிடும் திமுக; அமைச்சர் அன்பில் பொய்யாமொழியா, பொய்யின் மொழியா?- எச்.ராஜா கேள்வி

1 year ago 7
ARTICLE AD
<p>திமுக தலைவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p> <p>சென்னையில் செய்தியாளர்களிடம் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசினார். அவர் கூறியதாவது:</p> <p>&rsquo;&rsquo;தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்வி நிதி 4 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும். 2023 மார்ச் மாதம் அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, &rsquo;பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர்கிறோம். பணத்தைத் தாருங்கள்&rsquo; என்று எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தார். ஆனால், தமிழக அரசு சில நிபந்தனைகளை தற்போது விதித்துள்ளது.</p> <h2><strong>மோசமான நிலையில் இருப்பதாக ஒப்புக் கொள்ளுங்கள்</strong></h2> <p>காவல்துறையில் சேர்ந்தால் காக்கி சீருடை அணிய வேண்டும். கருப்பு- சிவப்பு ஆடைதான் அணிவேன் என்றால், அது என்ன பிடிவாதம்? அறிவற்ற விவாதம்.&nbsp;ஆனால் ஆசிரியர்களுக்கு நிதி அளிக்க முடியவில்லை என்று இந்த அரசு திசை திருப்புகிறது. அவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறீர்கள் என்று ஒப்புக் கொள்ளுங்கள்.</p> <p>2004 முதல் 2014 வரை திமுக, ஆளும் மத்திய அரசான காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. அப்போதே இதே தேசிய கல்விக் கொள்கை 3வது மொழி இந்தி அல்லது சமஸ்கிருதம் இருந்தது.</p> <h2><strong>எந்தக் கட்சித் தலைவர்களின் குழந்தைகள் எல்லாம் சமச்சீர் பாடத்திட்டத்தில் படிக்கின்றன?</strong></h2> <p>அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் என்ன வந்தது? திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக என எந்தக் கட்சித் தலைவர்களின் குழந்தைகள் எல்லாம் சமச்சீர் பாடத்திட்டத்தில் படிக்கின்றன? யாரெல்லாம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கின்றனர்?</p> <p>அன்பில் மகேஸ் பொய்யாமொழி குடும்பத்துக்கு மும்மொழி வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு மும்மொழி வேண்டாமா?&nbsp;வியாபாரத்துக்கும், உங்களின் குழந்தைகள் படிப்பதற்கு இந்தி வேண்டும். ஏழை, விவசாய, தமிழ்நாட்டுக் குழந்தைகள் படிக்க இந்தி வேண்டாமா?</p> <h2><strong>எது இந்தித் திணிப்பு?</strong></h2> <p>ஏதேனும் ஒரு இந்திய மொழியைப் படிக்கலாம் என்பது எப்படி இந்தித் திணிப்பு ஆகும்? உங்களின் (திமுக) தகிடுதத்தம் எங்களுக்குத் தெரியாதா?</p> <p>திமுக தலைவர்களின் குழந்தைகள் அனைவரையும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து சமச்சீர் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இல்லையெனில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்த வேண்டி வரும். மொழிக் கொள்கையில் திமுக வேடம் போடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். திமுகவின் பொய், புளுகை நாங்கள் அனுமதிக்க முடியாது. மக்களை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் திராவிட இயக்கத்தினர்&rsquo;&rsquo;.</p> <p>இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.</p>
Read Entire Article