போதையின் பாதையில்... கடலுக்குள் தத்தளித்த கார்.. கடலூரில் நடந்த காமெடி இதுதான்!

3 months ago 5
ARTICLE AD
<p>போதை தலைக்கு ஏறினால் பல தருணங்களில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பலரும் கோமாளித்தனங்களிலும் ஆபத்தான விஷப்பரீட்சைகளிலும் இறங்குவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.</p> <h2><strong>கடலில் மிதந்த கார்:</strong></h2> <p>அதாவது, கடலூர் முதுநகர் அருகே அமைந்துள்ளது சொத்திக்குப்பம். கடலோர பகுதியான இங்கிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். வழக்கம்போல அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடற்கரை ஓரத்தில் தயாராகிக் கொண்டிருந்தனர்.&nbsp;</p> <p>அப்போது, கடலில் கார் ஒன்று மிதந்து கொண்டு தத்தளிப்பதையும், உள்ளே ஆட்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உள்ளே சென்று காரில் இருந்தவர்களை மீட்டனர். பின்னர், டிராக்டர் மூலமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த காரையும் மீட்டனர்.</p> <h2><strong>கடலுக்குச் சென்றது எப்படி?</strong></h2> <p>இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் &nbsp;கார் எப்படி கடலுக்குச் சென்றது என்பதில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. காரில் இருந்த ஆண்களும், பெண்களும் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் வந்துள்ளனர்.</p> <p>மொத்தம் 5 பேரில் 2 பெண்கள், 3 ஆண்கள் இருந்துள்ளனர். அவர்களில் 3 பேர் மதுபோதையில் இருந்துள்ளனர். போதையில் இருந்தவர்களில் ஒருவர் இந்த கார் கடற்கரை மணலிலும் நன்றாகவே ஓடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, கடற்கரை மணலில் காரை ஓட்டியுள்ளனர்.&nbsp;</p> <h2><strong>போதை படுத்தும் பாடு:</strong></h2> <p>பின்னர், ஒரு நபர் இந்த கார் கடற்கரை மணல் மட்டுமின்றி கடல் நீரிலும் ஓடும் என்று கூறியுள்ளார். இதனால், காரில் இருந்த போதை ஆசாமிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எதுக்கு வாதம்? தண்ணீரில் காரை ஓட்டிப்பார்க்கலாம் என்று ஓட்டியுள்ளனர்.</p> <p>அப்போது, கடலில் சிறிது தூரம் கார் சென்றுள்ளது. ஆழம் அதிகரிக்க அதிகரிக்க எஞ்ஜின் ஆஃப் ஆகியுள்ளது. பின்னர், காரை மீண்டும் கரைக்கு எடுக்க முடியவில்லை. இதனால், காரில் இருந்த அனைவரும் உயிர் பயத்தில் அலறியுள்ளனர். இதையடுத்தே, மீனவர்கள் அவர்களைப் பார்த்து மீட்டுள்ளனர்.&nbsp;</p> <p>மதுபோதையில் இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பல சமயங்களில் மது போதையில் இதுபோன்ற விபரீத மற்றும் கோமாளித்தனமான செயல்களில் சிலர் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/must-eat-foods-looking-young-womens-health-tips-233641" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article