பென்சில் கொடுக்கல் வாங்கலில் தகராறு - சக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ம் வகுப்பு மாணவன்!

8 months ago 8
ARTICLE AD
<p>பென்சில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சக மாணவனை 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p> <p>பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேருக்கு பென்சில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் இன்று பள்ளிக்கு வரும்போது பேக்கில் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.&nbsp;</p> <p>இன்று பள்ளி ஆரம்பித்ததும் அந்த மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால் அரிவாளை எடுத்து வந்த மாணவன் இன்னொரு மாணவனை மிகவும் ஆக்ரோஷமாக தாக்கினான். இதில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு தலைப்பகுதி, தோள்பட்டை, முதுகு என வெட்டுக்காயங்கள் அதிகமாக விழுந்தன.&nbsp;</p> <p>இதைப்பார்த்த ஆசிரியர்கள் தாக்குதல் நடத்திய மாணவனை தடுக்க முயன்றனர். ஆனால் அவன் ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தினான். இதில் இரண்டு ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர்.&nbsp;</p> <p>பாதிக்கப்பட்ட ஒரு மாணவன் இரண்டு ஆசிரியர்கள் என மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;</p> <p>தகவல் அறிந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய மாணவனை பிடித்து கைது செய்துள்ளனர். அவர் மேல் சிறுவர்கள் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article