பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் அரசு மானியம்; பெறுவது எப்படி? தகுதி என்ன?

1 year ago 7
ARTICLE AD
<p>கைம்பெண்கள்&zwnj;, கணவனால்&zwnj; கைவிடப்பட்ட பெண்கள்&zwnj;, நலிவுற்ற பெண்கள்&zwnj;, ஆதரவற்ற பெண்கள்&zwnj; மற்றும்&zwnj; பேரிளம்&zwnj; பெண்களுக்கு தமிழக அரசின்&zwnj; ரூ. 50,000 மானியம்&zwnj; வழங்கும்&zwnj; திட்டத்திற்கு ஆதரவற்ற மகளிர்&zwnj; நல வாரியத்தில்&zwnj; விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்&zwnj; ரஷ்மி சித்தார்த்&zwnj; ஜகடே&zwnj; தெரிவித்துள்ளார்&zwnj;.</p> <p>இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:</p> <p>''தமிழக அரசு, சமூக நலன்&zwnj; மற்றும்&zwnj; மகளிர்&zwnj; உரிமைத்துறை மூலம்&zwnj; &nbsp;கைம்பெண்கள்&zwnj;, கணவனால்&zwnj; கைவிடப்பட்ட பெண்கள்&zwnj;, நலிவுற்ற பெண்கள்&zwnj;, ஆதரவற்ற பெண்கள்&zwnj; மற்றும்&zwnj; பேரிளம்&zwnj; பெண்களில்&zwnj; வறுமைக்கோட்டிற்கு கீழ்&zwnj; உள்ள 200 பயனாளிகளுக்கு சுய தொழில்&zwnj; செய்வதற்கு ரூ.50,000/- வீதம்&zwnj; வழங்குகிறது. இந்தப் பெண்கள் சுய தொழில்&zwnj; செய்து சுய மரியாதையுடன்&zwnj; வாழ்வதற்கு ரூ.1.00 கோடி மானியம்&zwnj; வழங்கியுள்ளது.</p> <h2><strong>யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?</strong></h2> <p>* இந்தத் திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; பயனடைய பின்&zwnj;வரும்&zwnj; தகுதிகளை கொண்டு இருக்க வேண்டும்&zwnj;.</p> <p>* கைம்பெண்கள்&zwnj; வாரியத்தில்&zwnj; பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்&zwnj;.</p> <p>* கைம்பெண்கள்&zwnj; நலவாரியத்தில்&zwnj; உறுப்பினர்&zwnj; ஆவதற்கு <a href="https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home">https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home</a> என்ற இணையதள முகவரியில்&zwnj; விண்ணப்பித்து உறுப்பினர்&zwnj; ஆகலாம்&zwnj;.</p> <p>* இத்திட்டத்தில்&zwnj; வறுமைக் கோட்டிற்கு கீழ்&zwnj; இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்&zwnj;.</p> <p>* விண்ணப்பிக்கும் பெண்கள் 25 முதல்&zwnj; 45 வயதிற்கு உள்ளாக இருக்க வேண்டும்&zwnj;.</p> <p>* குடும்ப ஆண்டு வருமானம்&zwnj; ரூ.1,20,000/- க்கு மிகாமல்&zwnj; இருக்க வேண்டும்&zwnj;.</p> <p>* ஒருவர்&zwnj; ஒரு முறை மட்டுமே மானியம்&zwnj; பெற தகுதியுடைவர் ஆவார்&zwnj;.</p> <p>* சுய தொழில்&zwnj; செய்வதற்கு மானியம்&zwnj; பெற அளிக்கப்படும்&zwnj; விண்ணப்பத்துடன்&zwnj; பின்வரும்&zwnj; சான்றுகள்&zwnj; இணைக்கப்பட வேண்டும்&zwnj;.</p> <p>* கைம்பெண்கள்&zwnj;, கணவனால்&zwnj; கைவிடப்பட்ட பெண்கள்&zwnj; நலிவுற்ற பெண்கள்&zwnj;, ஆதரவற்ற பெண்கள்&zwnj; மற்றும்&zwnj; பேரிளம்&zwnj; பெண்கள்&zwnj; என்பதற்கான சுய அறிவிப்பு, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல்&zwnj;, ஆதார்&zwnj; அட்டை நகல்&zwnj;, தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும்&zwnj; ஒரு சான்று.</p> <p>மேற்காணும்&zwnj; சான்றுகளுடன்&zwnj; கைம்பெண்கள்&zwnj; ஆதரவற்ற மகளிர்&zwnj; நல வாரியத்தில்&zwnj; விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப் படுகிறது.</p> <p>இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்&zwnj; ஜகடே&zwnj; தெரிவித்துள்ளார்.</p> <p>ஆதரவற்ற மகளிர்&zwnj; நல வாரியத்தில்&zwnj; விண்ணப்பிக்க&nbsp;<a href="https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/login">https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/login</a> என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.</p> <p>கூடுதல் விவரங்களுக்கு: <a title="https://www.tnwidowwelfareboard.tn.gov.in/" href="https://www.tnwidowwelfareboard.tn.gov.in/" target="_blank" rel="dofollow noopener">https://www.tnwidowwelfareboard.tn.gov.in/</a></p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article