<p>கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்களுக்கு தமிழக அரசின்‌ ரூ. 50,000 மானியம்‌ வழங்கும்‌ திட்டத்திற்கு ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே‌ தெரிவித்துள்ளார்‌.</p>
<p>இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:</p>
<p>''தமிழக அரசு, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌, நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்களில்‌ வறுமைக்கோட்டிற்கு கீழ்‌ உள்ள 200 பயனாளிகளுக்கு சுய தொழில்‌ செய்வதற்கு ரூ.50,000/- வீதம்‌ வழங்குகிறது. இந்தப் பெண்கள் சுய தொழில்‌ செய்து சுய மரியாதையுடன்‌ வாழ்வதற்கு ரூ.1.00 கோடி மானியம்‌ வழங்கியுள்ளது.</p>
<h2><strong>யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?</strong></h2>
<p>* இந்தத் திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைய பின்‌வரும்‌ தகுதிகளை கொண்டு இருக்க வேண்டும்‌.</p>
<p>* கைம்பெண்கள்‌ வாரியத்தில்‌ பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்‌.</p>
<p>* கைம்பெண்கள்‌ நலவாரியத்தில்‌ உறுப்பினர்‌ ஆவதற்கு <a href="https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home">https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home</a> என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பித்து உறுப்பினர்‌ ஆகலாம்‌.</p>
<p>* இத்திட்டத்தில்‌ வறுமைக் கோட்டிற்கு கீழ்‌ இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.</p>
<p>* விண்ணப்பிக்கும் பெண்கள் 25 முதல்‌ 45 வயதிற்கு உள்ளாக இருக்க வேண்டும்‌.</p>
<p>* குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.1,20,000/- க்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.</p>
<p>* ஒருவர்‌ ஒரு முறை மட்டுமே மானியம்‌ பெற தகுதியுடைவர் ஆவார்‌.</p>
<p>* சுய தொழில்‌ செய்வதற்கு மானியம்‌ பெற அளிக்கப்படும்‌ விண்ணப்பத்துடன்‌ பின்வரும்‌ சான்றுகள்‌ இணைக்கப்பட வேண்டும்‌.</p>
<p>* கைம்பெண்கள்‌, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்கள்‌ நலிவுற்ற பெண்கள்‌, ஆதரவற்ற பெண்கள்‌ மற்றும்‌ பேரிளம்‌ பெண்கள்‌ என்பதற்கான சுய அறிவிப்பு, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல்‌, ஆதார்‌ அட்டை நகல்‌, தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும்‌ ஒரு சான்று.</p>
<p>மேற்காணும்‌ சான்றுகளுடன்‌ கைம்பெண்கள்‌ ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப் படுகிறது.</p>
<p>இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே‌ தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆதரவற்ற மகளிர்‌ நல வாரியத்தில்‌ விண்ணப்பிக்க <a href="https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/login">https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/login</a> என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.</p>
<p>கூடுதல் விவரங்களுக்கு: <a title="https://www.tnwidowwelfareboard.tn.gov.in/" href="https://www.tnwidowwelfareboard.tn.gov.in/" target="_blank" rel="dofollow noopener">https://www.tnwidowwelfareboard.tn.gov.in/</a></p>
<p> </p>
<p> </p>