புத்தகப் பிரியரா நீங்கள்? வீடுகளில் வைத்திருக்கிறீர்களா? இதோ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

1 year ago 7
ARTICLE AD
<p>சென்னை மாவட்டத்தில்&zwnj; வீடுகளில்&zwnj; நூலகம்&zwnj; வைத்திருப்போர், இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்&zwnj; என்று மாவட்ட நூலக அலுவலர்&zwnj; அழைப்பு விடுத்துள்ளார்.</p> <p>இதுகுறித்து மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலகம்&zwnj; வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:</p> <p>''தமிழக அரசு, வீடுதோறும்&zwnj; நூலகங்கள்&zwnj; அமைக்க வேண்டும்&zwnj; என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம்&zwnj; தோறும்&zwnj; புத்தகத்&zwnj; திருவிழாக்களை நடத்தி வருகிறது.</p> <h2><strong>சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில்&zwnj; கேடயம்</strong></h2> <p>ஒவ்வொரு மாவட்டத்திலும்&zwnj; வீடு தோறும்&zwnj; நூலகங்கள்&zwnj; அமைத்து பயன்படுத்தி வரும்&zwnj; தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும்&zwnj; பொருட்டு விருது வழங்கப்படும்&zwnj; என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை அடுத்து&zwnj;, சென்னை மாவட்டத்தில்&zwnj; வீடுதோறும்&zwnj; நூலகங்கள்&zwnj; அமைத்துச்&zwnj; சிறப்பாகப்&zwnj; பயன்படுத்தி வரும்&zwnj; தனி நபருக்கு மாவட்டங்களில்&zwnj; நடத்தப்படும்&zwnj; புத்தக கண்காட்சியில்&zwnj; சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில்&zwnj; கேடயம் மற்றும்&zwnj; சான்றிதழ்&zwnj; மாவட்ட ஆட்சியர்&zwnj; தலைவரால்&zwnj; வழங்கப்படவுள்ளது.</p> <h2><strong>எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?</strong></h2> <p>இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்&zwnj;, தங்களது வீட்டில்&zwnj; உள்ள நூலகத்தில்&zwnj; எத்தனை நூல்கள்&zwnj; உள்ளன, எந்த வகையான நூல்கள்&zwnj; மற்றும்&zwnj; அரிய நூல்கள்&zwnj; விவரம்&zwnj; என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அத்துடன், பெயர்&zwnj;, முகவரி, செல்போன்&zwnj; எண்&zwnj; ஆகியவற்றைக்&zwnj; குறிப்பிட்டு <strong>[email protected]</strong> என்ற இ-மெயில்&zwnj; முகவரிக்கும்&zwnj;, கீழ்க்காணும்&zwnj; மாவட்ட நூலக அலுவலக முகவரிக்கும்&zwnj; விண்ணப்பக்கலாம்&zwnj; என மாவட்ட நூலக அலுவலரால்&zwnj; தெரிவிக்கப்படுகிறது''.</p> <p>இவ்வாறு சென்னை அண்ணா சாலை மாவட்ட நூலக ஆணைக் குழு அலுவலக மாவட்ட நூலக அலுவலர்&zwnj; தெரிவித்துள்ளார்.</p> <p>கூடுதல் தகவல்களுக்கு: 044- 28524791</p>
Read Entire Article