பிரதமர் மோடி பெருமிதம் “ நமது விஞ்ஞானிகள் விண்வெளியிலே செடி வளர்த்து அசத்தியுள்ளனர்.!

11 months ago 7
ARTICLE AD
<p>பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் இன்று மக்களுடன் உரை நிகழ்த்தினார், அவர் தெரிவித்ததாவது , &ldquo; விஞ்ஞானிகள், விண்வெளித்துறையில் மேலும் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தினார்கள். &nbsp;நமது விஞ்ஞானிகள் செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைப்புச் செய்தார்கள். &nbsp;விண்வெளியிலே இரண்டு விண்கோள்கள் இணைக்கப்படும் செயல்பாட்டைத் தான் விண்வெளியில் இணைப்பு &ndash; Space Docking என்று அழைக்கிறார்கள். &nbsp;இந்தத் தொழில்நுட்பம், விண்வெளியில் உள்ள விண்வெளி நிலையம் வரை பொருட்களை அனுப்பவும், குழுப்பயணத்திற்கும் மிக முக்கியமானது. &nbsp;பாரதம் இப்படிச் செய்யக்கூடிய நான்காவது நாடாக ஆகியிருக்கிறது, இதிலே நமக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.</p> <p>நண்பர்களே, நமது விஞ்ஞானிகள் விண்வெளியிலே செடி வளர்த்து, அவற்றை உயிர்ப்போடு இருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். &nbsp;இதற்காக இஸ்ரோவின் விஞ்ஞானிகள், காராமணி விதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். &nbsp; &nbsp;டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று அனுப்பப்பட்ட விதைகள் விண்வெளியிலே முளைவிட்டிருக்கின்றன. &nbsp;இது மிகவும் உத்வேகம் அளிக்கவல்ல ஒரு பரிசோதனையாகும். &nbsp;எதிர்காலத்தில் விண்வெளியிலே காய்கறிகளை பயிர்செய்யும் பாதையும் திறக்கும்.</p> <p>&nbsp;நமது அறிவியலார்கள் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்கள் என்பதை நமக்கு இது எடுத்துக் காட்டுகிறது. நண்பர்களே, இந்தச் சாதனைகள் அனைத்தும், பாரதநாட்டின் விஞ்ஞானிகளும், நூதனங்களைப் படைப்போரும் எதிர்காலச் சவால்களுக்குத் தீர்வுகளை அளிக்கவல்ல தொலைநோக்காளர்கள் என்பதற்குச் சான்று பகிர்கின்றன. &nbsp;நமது தேசம் இன்று விண்வெளித் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கற்களை நிறுவி வருகின்றது. &nbsp;நான் நமது நாட்டின் விஞ்ஞானிகள், புதுமைகளின் கண்டுபிடிப்பாளர்கள், இளவயது தொழில்முனைவோர் ஆகியோருக்கும் தேசத்தின் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.&nbsp;</p>
Read Entire Article