பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?

10 months ago 14
ARTICLE AD
<p>பிரதமராக மோடி 11 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், அவரின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிப்பதற்காக நமோ செயலியில் ஜன் மன் சர்வே என்ற பெயரில் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. சர்வே தொடங்கப்பட்டு ஒரே நாளில் 5 லட்சம் பேர், நமோ செயலியில் தங்களின் கருத்துகளின் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p> <h2><strong>மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு?</strong></h2> <p>நிர்வாகம், தேசிய பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களை X தளத்தில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் இந்தியாவின் உலகளாவிய பிம்பம் முதல் டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம், திறன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் கலாச்சார பெருமை வரை பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 15 கேள்விகள் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ளன.</p> <p>கடந்த 2014ஆம் ஆண்டுப முதல், என்ன நடந்தது என்பதை மக்கள் மதிப்பாய்வு செய்வது மட்டுமல்லாமல், இந்தியா அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவும் இந்த கணக்கெடுப்பு உதவுகிறது.</p> <h2><strong>கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள்?</strong></h2> <ul> <li>தற்போதைய தேசிய பாதுகாப்புக் கொள்கைகளால் நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்களா?</li> <li>இந்தியாவின் உலகளாவிய நிலை மேம்பட்டுள்ளதா?</li> <li>எந்த டிஜிட்டல் இந்தியா தயாரிப்பை நீங்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்கள்?</li> <li>எந்த வளர்ச்சி உங்களை பெருமைப்படுத்தியது?</li> <li>'மேக் இன் இந்தியா' இயக்கம் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்துறைக்கு உதவியதா?</li> </ul> <p>கணக்கெடுப்பில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பங்கேற்றுள்ளனர். அம்மாநிலத்தில் இருந்து 1,41,150 பேர் கணக்கெடுப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து 65,775 பேர் கணக்கெடுப்பில் பங்கேற்று பதில் அளித்துள்ளனர்.&nbsp;</p> <p>தமிழ்நாட்டில் இருந்து 62,580 பேரும் குஜராத்தில் இருந்து 43,590 பேரும் ஹரியானாவில் இருந்து 29,985 பேரும் கணக்கெடுப்பில் கலந்து கொண்டுள்ளனர். பங்கேற்பாளர்களில் சுமார் 77 சதவீதம் பேர் முழு கணக்கெடுப்பையும் நிறைவு செய்தனர். இது அவர்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது.</p> <p>பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கணக்கெடுப்பில் பதிலளிப்பதால், மக்களை கவர்ந்த திட்டம் எது, அடுத்து எதில் கவனம் செலுத்துவது என்பது குறித்த புரிதலை அரசு பெறும்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article