பால்குடம் எடுக்கும் மியா கலிஃபா.. ஆடி மாத அம்மன் திருவிழாவில் அதிர்ச்சி...!

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;"><strong style="color: #ba372a;">காஞ்சிபுரத்தில் மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்று திருவிழா பேனரில் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</strong></p> <h2 style="text-align: justify;">ஆடி மாதமும் அம்மனும்...</h2> <p style="text-align: justify;">ஆடி மாதம் என்றாலே, பல கோயில்கள் திருவிழா கோலம் பூண்டு விடும். குறிப்பாக ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களுக்கு பொதுமக்கள் படையெடுப்பது அதிகரிக்கும். ஆடி மாதங்களில் குலதெய்வம் கோயிலுக்கு செல்வதும் அம்மன் கோயிலுக்கு செல்வதும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது போக ஆடி மாதம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் அம்மன் கோயில்களுக்கு, திருவிழா எடுப்பதும் பல நூற்றாண்டுகளாக தமிழர் பாரம்பரியத்தில் இருந்து வருகிறது.&nbsp;</p> <p style="text-align: justify;">கிராமங்களில் நடைபெறும் ஆடி மாத அம்மன் கோவில் திருவிழாக்களில், தீ மிதிப்பது, கூழ் ஊற்றுதல், <a title="பொங்கல்" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a> வைத்தல் உள்ளிட்ட திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும்.&zwnj; அதேபோன்று ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.&nbsp;</p> <h2 style="text-align: justify;">இளைஞர்களின் அலப்பறை..</h2> <p style="text-align: justify;">ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பை பெறும். ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில் வெளியூர் சென்று வேலை செய்யும் இளைஞர்கள் அனைவரும் கிராமங்களில் கூடுவது வழக்கம். அதேபோன்று திருவிழாக்களில் இளைஞர்களின் பங்கும் மிக இன்றியமையாளராக இருக்கும். பலவகை வேலைகளை இளைஞர்களே எடுத்து போட்டு செய்வதும் இந்த திருவிழாக்களின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/08/1643779ed67003dee3126c6d04c307761723088037164739_original.jpg" width="720" height="405" /></p> <p style="text-align: justify;">அவ்வாறு திருவிழாக்களில் பல வேலைகளையும் செய்யும் இளைஞர்கள் பேனர் வைப்பது, என்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊர் மக்களின் கவனத்தை பெறுவதற்காக நூதன முறையில் பேனர்களையும் இளைஞர்கள் வைப்பார்கள். பேனரில் தங்களுக்கு பிடித்த நடிகை நடிகர்களின் புகைப்படங்கள் இடம் பெறுவது, அம்மன் புல்லட்டில் செல்வதைப் போன்று கிராபிக்ஸ் டிசைன் வைப்பது என பல வகையில், கவனத்தைக் கவரும் வகையில் இளைஞர்கள் பேனர் அமைப்பது வழக்கம். அந்த வகையில் காஞ்சிபுரம் குருவி மலை பகுதியில் அம்மன் கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள பேனர் , சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p> <h2 style="text-align: justify;">குருவிமலை கோயில் திருவிழா...</h2> <p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயில் வளாகத்தில், ஸ்ரீ நாகாத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயிலுக்கு கிராம மக்கள் ஆடி மாத திருவிழா எடுத்து வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நாளை ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு, நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் ஆலயத்தில் வளைகாப்பு வைபோக விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டை கிராம விழா குழுவினர் செய்து வருகின்றனர்.&nbsp;</p> <h2 style="text-align: justify;">பேனரால் சர்ச்சை..</h2> <p style="text-align: justify;">இந்தநிலையில் கிராமத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் திருவிழாவை முன்னிட்டு நூதன முறையில் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் ஆதார் கார்டு வடிவில் பேனர் வைத்தவர்களின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 'எங்க பாசம் ஊரே பேசும்' என்ற வாசகங்களுடன் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மன் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கும் அதே வேளையில், பிரபல ஆபாசப்பட நடிகை மியா காலிஃபா மஞ்சள் உடையில் பால்குடம் எடுத்துச் செல்லும் புகைப்படம் இடம்பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p style="text-align: justify;">&nbsp;</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/08/e8524875eeeffebf1cda5eb23f775cd81723088113343739_original.jpg" width="720" height="405" /></p> <p style="text-align: justify;">பொதுவாக திருவிழாக்களில் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த பேனரில் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் மியா கலிஃபா இடம் பெற்று இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளைஞர்களுக்கு மியா கலிஃபா பத்தி தெரிந்திருக்கலாம், ஆனால் கிராம பெரியோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு என்பதால் கிராம பெரியவர்களும் அதை கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். இந்தநிலையில் இந்த பேனர் குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 'எங்க பாசம் ஊரே பேசும் ' என அவர்கள் வைத்த டயலாக் தற்பொழுது அவர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளது. மியா கலிஃபாவால் தற்பொழுது தமிழ்நாடு அவர்களை பற்றி பேச துவங்கியுள்ளது. இளைஞர்கள் என்றால் சேட்டை செய்வது வழக்கம்தான், ஆனால் இது சற்று எல்லை மீறிய செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p>
Read Entire Article