"பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்"..ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

9 months ago 9
ARTICLE AD
<p>பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என கூறியவர்கள் எல்லாம், தற்போது கூட்டணிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக அதிமுகவை விமர்சித்திருக்கிறார்.&nbsp;</p> <h2><strong>அதிமுகவை தாக்கி பேசிய அண்ணாமலை:</strong></h2> <p>தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியை என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் , சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு , எங்களுக்கு ஒரே எதிரி திமுக என இபிஎஸ் பதிலளித்தார்.&nbsp;</p> <p>மேலும், இரு தினங்களுக்கு முன்பு அண்ணமலை தெரிவிக்கையில், &ldquo; அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என தெரிவித்தார். ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திடீரென இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை காட்டமாக மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.&nbsp;</p> <p>இன்று அண்ணாமலை பேசியதாவது , &ldquo; பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டார் கட்சி என்றும் மற்றும் பாஜகவால்தான் தோற்றோம் என்று கூறியவர்கள் , இன்று எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டே இருக்கிறது.&nbsp;</p> <h2><strong>முதல்வர் வேட்பாளர்:</strong></h2> <p>இக்கட்டான் சூழ்நிலையில் வந்தவர் தினகரன். பாஜக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும்.&nbsp;</p> <p>மேலும், இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் தலைமையில்தான் கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயக்குமார் தெரிவித்த நிலையில்,&nbsp; பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>இந்நிலையில், அதிமுகவை சிறுமைப்படுத்தும் விதமாக , அண்ணாமலை பேசு வேண்டிய திடீர் சூழல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன, அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி எதிராக போக்கிற்கு சென்றுவிட்டதா என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறது, அண்ணாமலையி பேச்சு.&nbsp;</p>
Read Entire Article