பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி! – காலையிலேயே சோக சம்பவம்

10 months ago 7
ARTICLE AD
<p>ஸ்வீடனில் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>ஐரோப்பாவில் அமைந்துள்ள ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக் ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒரிபுரோ. இங்கு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.</p> <p>இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் திடீரென ஒரு நபர் பயங்கரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 10 பேர் உயிரிழந்தனர்.</p> <p>இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை &nbsp;மேற்கொண்டனர்.</p> <p>விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p> <p>இதனிடையே படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p> <p>"இன்று சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். சம்பவத்தின் அளவு காரணமாக சரியான எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை" என்று ஃபாரஸ்ட் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p> <p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனியாகச் செயல்பட்டிருக்கலாம் என்றும், தற்போது பயங்கரவாதம் தான் இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கவில்லை என்றும் போலீசார் நம்புகின்றனர்.</p> <p>இதுகுறித்து ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டர்சன் தனது எக்ஸ் தளத்தில், &ldquo;இது அனைவருக்கும் வேதனையான நாள். என் எண்ணங்கள் முழுவதும் சாதாரண பள்ளி நாள் பங்கரவாத நாளாக மாறியதை பற்றியே இருக்கிறது. உயிருக்கு பயந்து வகுப்பறையில் சிக்கிக் கொள்ளும் கொடூரத்தை யாரும் தாங்கிக் கொள்ள முடியாது&rdquo; எனத் தெரிவித்துள்ளார்.</p> <p>மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு யாரோ ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து அனைவரையும் வெளியே செல்லுமாறு கூச்சலிட்டதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>இதுகுறித்து அவர் கூறுகையில், &ldquo;நான் என்னுடைய 15 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு நடைபாதைக்குள் சென்றேன், நாங்கள் ஓட ஆரம்பித்தோம். பின்னர் இரண்டு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. ஆனால் நாங்கள் தப்பித்தோம். நாங்கள் பள்ளி நுழைவாயிலுக்கு அருகில் இருந்தோம்&rdquo; எனத் தெரிவித்தார்.</p>
Read Entire Article