பலத்த காற்றால் விழுந்த மரம்... ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

6 months ago 5
ARTICLE AD
<p>ஊட்டியில் விடாமல் பெய்து வரும் கனமழையினால் மரம் முறிந்து விழுந்ததில் கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.&nbsp;</p> <h2>தென் மேற்கு பருவமழை:&nbsp;</h2> <p>வெயில் காலம் முடிந்து தற்போது நாடு முழுவதும் பருவமழை துவங்கியுள்ளது, அந்தமானில் கடந்த 13 ஆம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் நேற்று கேரளாவில் தென் மேற்கு தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது.&nbsp;</p> <p>வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது.&nbsp;</p> <h2>ரெட் அலர்ட்:&nbsp;</h2> <p>அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கோவை மற்றும் உதகையில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று காலையில் இருந்து உதகையில் கனமழையானது பெய்து வந்தது. &nbsp;</p> <h2>சிறுவன் உயிரிழப்பு:</h2> <p>இந்த நிலையில் கேரள மாநில &nbsp;கள்ளிக்கோட்டையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆதிதேவ் தனது பெற்றோருடன் பைன் காடுகள் பகுதியை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது 7 ஆம் மைல் பகுதியில் திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக மரம் முறிந்து சிறுவனின் மீது விழுந்தது. மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.&nbsp;</p> <p>கோடை விடுமுறைக்காக பெற்றோருடன் &nbsp;சுற்றுலா வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.</p>
Read Entire Article