<p> </p>
<p>மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. </p>
<p>இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “10 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2வது விமான நிலையம் அமைவதால் பல துறைகள் வளர்ச்சி பெறும். மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். </p>
<p>பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து மிகுந்த கவனத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. </p>
<p>மக்களின் வாழ்வாதாரம், நலன்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். பண்ணூரில் 1,546 குடும்பங்கள், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது விமானநிலைய செயல்பாடுகளுக்கு தடைகள் பரந்தூரில் குறைவாக உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>