பயம் தரும் வெள்ளியங்கிரி ஏற்றம் – தொடர்ந்து நடக்கும் மரணங்கள்...

1 month ago 5
ARTICLE AD
<p data-start="93" data-end="280">கோவை மாவட்டத்தில் உள்ள <span class="hover:entity-accent entity-underline inline cursor-pointer align-baseline"><span class="whitespace-normal">வெள்ளியங்கிரி மலை</span></span> ஏற்றத்திற்கு சென்ற பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p data-start="282" data-end="566">வனத்துறை கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கியதையடுத்து, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மலையேற்றத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p> <p data-start="282" data-end="566"><strong>பயம் தரும் வெள்ளியங்கிரி ஏற்றம்</strong></p> <p data-start="568" data-end="798">திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (60) என்பவர் நேற்று நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறச் சென்றுள்ளார். முதல் மலையை ஏறும் போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.&nbsp;இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் டோலி தூக்கும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு டோலி மூலம் பூண்டி அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.&nbsp;</p> <p data-start="568" data-end="798">அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.&nbsp;சமீப காலமாக வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மலையேறும் பக்தர்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.</p>
Read Entire Article