பக்தர்களுக்கு இனி பிரச்னை இல்ல.. அத்திப்பட்டு, கும்மிடிப்பூண்டி இடையே புதிய ரயில் பாதைகள்

5 months ago 4
ARTICLE AD
<p>திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அத்திப்பட்டு மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே 22.52 கி.மீ நீளமுள்ள மூன்று மற்றும் நான்காவது ரயில் பாதைகள் ரூ.374.3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன. இது, சென்னை - கூடூர் வடகிழக்கு ரயில்வே பாதையில் உள்ள மிக முக்கியமான பகுதி ஆகும். இதனை, இரண்டாண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;</p> <h2><strong>இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:</strong></h2> <p><strong>மொத்த ரயில்வே வழித்தடத்தின் நீளம்:</strong>&nbsp;47&nbsp;கிமீ</p> <p><strong>பாலங்கள்:</strong>&nbsp;6&nbsp;பெரிய பாலங்கள் மற்றும்&nbsp;48&nbsp;சிறிய பாலங்கள்</p> <p><strong>மின் பாதை அமைப்பு:</strong> 2x25 கிலோவோல்ட்</p> <p><strong>வேகம்:</strong> மணிக்கு&nbsp;160&nbsp;கிமீ</p> <p><strong>ரயில் நிலையங்கள்: </strong>அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி</p> <h2><strong>அத்திப்பட்டு, கும்மிடிப்பூண்டி இடையே புதிய ரயில் பாதைகள்:</strong></h2> <p>இந்தத் திட்டத்தின் மூலம் வழித்தட திறன் பயன்பாடு தற்போது உள்ள 99.1% இலிருந்து 63.7% ஆகக் குறையவுள்ளது. இதனால் எஃகு, உணவுதானியம், பெட்ரோரசாயனங்கள், உரம், சிமென்ட் மற்றும் வாகனங்கள் போன்ற முக்கிய பொருட்களின் வேகமான மற்றும் சீரான போக்குவரத்து சாத்தியமாகும்.</p> <p>மேலும், சென்னை துறைமுகம், காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை இணைக்கும் இந்த திட்டம், காமராஜர் துறைமுகத்தில் உள்ள இந்தியப் பெட்டகக் கழக சரக்கு முனையத்திற்கும் சேவையளிக்கும்.</p> <h2><strong>பக்தர்களுக்கு இனி பிரச்னை இல்ல!</strong></h2> <p>சுற்றுலாவுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய பழவேற்காடு ஏரி,&nbsp;பூண்டி ஏரி,&nbsp;ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயசுவாமி கோவில்,&nbsp;திருவள்ளூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில்,&nbsp;திருவொற்றியூர் பவானி அம்மன் கோவில்,&nbsp;பெரியபாளையம் தேவி கருமாரியம்மன் கோவில்,&nbsp;திருவேற்காடு அம்பிகை,&nbsp;திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,&nbsp;திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயில்&nbsp; முதலியவை பெரும் ஊக்கம் அடையும்.</p> <p>இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால், முதலாண்டில் கூடுதலாக வருடத்திற்கு 8.71 மில்லியன் சரக்குகள் கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல 6-வது ஆண்டில் வருடத்திற்கு 11.11 மில்லியன் டன்னும், 11-வது ஆண்டில் வருடத்திற்கு 14.18 மில்லியன்&nbsp; டன் சரக்குகளும்&nbsp; கூடுதலாகக் கையாளப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.&nbsp; இந்தத் திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக அமையும்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article