"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" - சி.வி.சண்முகத்தின் ஏரியாவிலேயே சவால் விட்ட சசிகலா!

1 month ago 6
ARTICLE AD
<p>விழுப்புரம்: அதிமுகவின் எஃகு கோட்டையாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில், அதுவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான திண்டிவனத்திலேயே சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>சி.வி.சண்முகத்தின் கோட்டையில் சசிகலா என்ட்ரி</h2> <p>விழுப்புரம்: அதிமுகவின் எஃகு கோட்டையாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில், அதுவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான திண்டிவனத்திலேயே சசிகலா தனது அரசியல் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>ஒரு காலத்தில் சி.வி.சண்முகத்தின் நிழலாகவும், தீவிர விசுவாசியாகவும், முன்னால் நகரமன்ற துணை தலைவராகவும் வலம் வந்தவர் தான் &nbsp;முஹம்மது ஷெரீப். கடந்த 2022-ல் இவர் சசிகலா அணிக்கு மாறியபோது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், இன்று வட மாவட்டங்களில் சசிகலாவின் தளபதியாக உருவெடுத்துள்ள முஹம்மது ஷெரீப், சி.வி.சண்முகத்தின் சொந்த மண்ணிலேயே பிரம்மாண்டமான இப்தார் நோன்பு நிகழ்ச்சியை நடத்தி அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.</p> <p>சமீபத்தில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள சசிகலா, தனது அரசியல் பயணத்தின் முதல் முக்கிய நிகழ்வாக திண்டிவனத்தைத் தேர்ந்தெடுத்தது தற்செயலானது அல்ல என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அவருக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு, அப்பகுதி அதிமுகவினரிடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.</p> <p>நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி ஆவேசமாக உரையாற்றினார்:</p> <p>"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் பயணிக்கும் நமக்கு, மக்கள் ஆதரவு என்றும் உண்டு. வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுத்து நாம் வெற்றி வாகை சூடுவோம்!"</p> <p>எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் யாருக்கும் அஞ்சாமல் நேர்மையோடு நடைபோட்டு, எத்தகைய சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, நம் கழகத் தொண்டர்களின் ஆதரவோடு தமிழக மக்களின் நலன் காப்போம் என்று இந்த பொன்னான நேரத்தில் உறுதி அளிக்கிறேன் என்று பேசினார்.</p> <p>சொந்த ஊரிலேயே சசிகலா காலூன்றுவதை சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, "துரோகிகளை வேரறுப்போம்" என சசிகலா பேசியிருப்பது, அதிமுகவின் தற்போதைய முக்கியத்தலைவர்களைக் குறிவைத்தே சொல்லப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது.</p> <p>சசிகலாவின் இந்த அதிரடி 'மூவ்', விழுப்புரம் மாவட்ட அரசியலில் ஒருபுதிய போரைத் தொடங்கி வைத்திருக்கிறது. வரும் நாட்களில் வட மாவட்ட அதிமுகவில் இன்னும் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Read Entire Article