நவராத்திரி விழா: வரும் 12ஆம் தேதி வரை தங்கரத புறப்பாடு நடைபெறாது - பழனி கோயில் நிர்வாகம்

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக இருப்பது பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் முருக பெருமானிற்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி, மற்றும் வைகாசி விசாகம், சஷ்டி விரதம், தைப்பூசம், உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.</p> <p style="text-align: center;"><a title=" ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!" href="https://tamil.abplive.com/news/world/abp-exclusive-beirut-strikes-target-next-hezbollah-chief-37-dead-in-israel-bombardment-on-lebanon-in-24-hours-202962" target="_blank" rel="noopener"> ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!</a></p> <p style="text-align: center;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/04/bb4922b7343a14ed0ddc345ba259e69b1728028123506739_original.JPG" /></p> <p style="text-align: justify;">கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது, மேலும் மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்ய படிப்பாதை, யானை பாதை, ரோப் கார் சேவை மின் இழுவை ரயில் ஆகியவை இருப்பதினால் மாற்றுத்திறனாளிகளும் முதியவர்களும் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவையின் மூலம் மலைக் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.</p> <p style="text-align: center;"><a title=" Tirupati Laddu Row: &rsquo;திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது&rsquo;- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!" href="https://tamil.abplive.com/news/india/tirupati-laddu-row-there-should-be-no-politics-the-supreme-court-formed-a-new-sit-committee-202958" target="_blank" rel="noopener"> Tirupati Laddu Row: &rsquo;திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது&rsquo;- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!</a></p> <p style="text-align: center;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/04/8cf2d32dd98cb705eefd381536cb773c1728027650985739_original.JPG" /></p> <p style="text-align: justify;">பொது தரிசனம் மற்றும் இலவச தரிசன வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளும் நிலையில் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா&nbsp; தொடங்கியுள்ளது. காலை பெரிய நாயகி அம்மன் கோவிலில் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருடன் சிறப்பு பூஜைகள், செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/04/36922e03f5552cd53dfa310867ec9e591728028143769739_original.JPG" /></p> <p style="text-align: justify;">மதியம் உச்சிக்கால பூஜை நடைபெற்ற பிறகு முருகப்பெருமான் துவார பாலகர்கள் வாகனம் ஆகியவற்றிற்கு காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெற இருக்கின்றது, மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.</p> <p style="text-align: center;"><a title=" பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு..." href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tvk-vijay-maanadu-2024-the-work-of-erecting-the-tvk-started-from-the-first-conference-202927" target="_blank" rel="noopener"> பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...</a></p> <p style="text-align: center;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/04/cd2ff078db670409ec2de6359dad08be1728028160964739_original.JPG" /></p> <p style="text-align: justify;">&nbsp;12ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் இருந்து பராசக்தி வேர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது, முத்துக்குமாரசாமி தங்க குதிரை வாகனத்தில் கோதை மங்கலம் சென்று வில் அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Read Entire Article