நகை கடையில் அதிர்ச்சி ! தங்க செயினுக்கு பதிலாக கவரிங் செயின் , 19 சவரன் தங்க செயின் பறிமுதல்

1 month ago 4
ARTICLE AD
<p><strong>நகை கடையில் கவரிங் செயின்</strong></p> <p>சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் மாத வராமு ( வயது 32 ) இவர் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனிஷ்க் நகை கடையில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24 - ம் தேதி , நகைக் கடையில் இருந்த தங்க நகைகளை சரி பார்த்த போது , அதில் தங்க செயின் அடங்கிய பெட்டியில் இரண்டு கவரிங் தங்க செயின் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.</p> <p>இது குறித்த புகாரையடுத்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். அதில் நகை கடையில் பணிபுரிந்து வந்த ஊழியரான அண்ணனுார் தேவி நகரைச் சேர்ந்த லோகேஷ் ( வயது 26 ) மற்றும் அவரது நண்பர் திருவேற்காடு செல்வ கணபதி நகரைச் சேர்ந்த கவுதம் ( வயது 29 ) இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.</p> <p><strong>19 சவரன் நகை திருட்டு</strong></p> <p>கடையில் வேலை செய்து வந்த லோகேஷ் கொடுத்த திட்டத்தின் படி , அவரது நண்பர் கவுதம் நகை கடைக்கு வாடிக்கையாளர் போல் சென்றுள்ளார். பின் மற்ற ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கவரிங் நகையை வைத்து விட்டு 19 சவரன் மதிப்பிலான இரு தங்க செயினை திருடிச் சென்றது விசாரணையில் தெரிந்தது. லோகேஷ் , கவுதம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 19 சவரன் செயின்களை பறிமுதல் செய்தனர்.</p> <p><strong>அரசு பேருந்தில் பயணித்த கர்ப்பிணியிடம், 18.5 சவரன் தங்க நகை திருட்டு</strong></p> <p>தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் குமரன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் அரசு மருத்துவர். இவரது மனைவி பிரியா ( வயது 30 ) ஆறு மாத கர்ப்பிணி. இவர், வேலுாரில் உள்ள தனது உறவினர் திருமண விழாவில் பங்கேற்க தன் ஒன்பது வயது மகளுடன், தாம்பரத்தில் இருந்து வேலுார் செல்லும் அரசு பேருந்து தடம் எண் - 155 ல் ஏறி பயணித்தார்.</p> <p>திருமண விழாவில் அணிந்து கொள்ள, 18.5 சவரன் தங்க நகைகளை பையில் எடுத்து சென்றுள்ளார். தாம்பரத்தில் இருந்து படப்பை சென்ற போது பேருந்தில் பயணித்த 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் சில்லரை நாணயங்களை பிரியா மீது தவறவிட்டுள்ளார்.</p> <p>சாமி உண்டியலில் போட வேண்டும் எனக் கூறி, கீழே விழுந்த சில்லரை நாணயங்களை எடுத்து தருமாறு அந்த நபர் பிரியாவிடம் கூறியுள்ளார். அதனால், சில்லரை நாணயங்களை சேகரித்து அந்த நபரிடம் பிரியா கொடுத்துள்ளார்.</p> <p>அதன் பின் , அந்த நபர் படப்பை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். ஒரகடம் பகுதியை பேருந்து கடந்த போது, தனது பை திறந்த நிலையில் இருப்பதையும் , அதில் இருந்த தங்க நகை மாயமானதையும் கண்டு பிரியா அதிர்ச்சியடைந்தார்.</p> <p>இதையெடுத்து , பேருந்தில் இருந்து இறங்கி வந்து , படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p>
Read Entire Article