“துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்

1 year ago 8
ARTICLE AD
<p>இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:</p> <p>&rsquo;&rsquo;புரட்சித்&zwnj; தலைவர்&zwnj; எம்&zwnj;.ஜி.ஆரால்&zwnj; தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை அளிக்க வேண்டும்&zwnj; என்பதற்காக துவங்கப்பட்ட மாபெரும்&zwnj; மக்கள்&zwnj; இயக்கமாம்&zwnj; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழகம்&zwnj;, தொடர்ந்து மூன்று முறை எம்&zwnj;.ஜி.ஆர்&zwnj;. &nbsp;தலைமையில்&zwnj; ஆட்சி அமைத்தது.</p> <p>சத்துணவுத்&zwnj; திட்டம்&zwnj;, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தியது, தஞ்சையில்&zwnj; தமிழ்ப்&zwnj; பல்கலைக்கழகம்&zwnj; உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கியது, இலவச வேட்டி சேலைத்&zwnj; திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ஐந்தாவது உலகத்&zwnj; தமிழ்&zwnj; மாநாட்டை நடத்தியது எனப்&zwnj; பல்வேறு சாதனைகளை எம்&zwnj;.ஜி.ஆர்&zwnj;.&zwnj; நிகழ்த்திக்&zwnj; காட்டினார்&zwnj;.</p> <p><strong>தடைகளைத் தகர்த்தெறிந்த ஜெயலலிதா</strong></p> <p>அவரின்&zwnj; மறைவிற்குப்&zwnj; பிறகு, பல்வேறு தடைகளைத்&zwnj; தகர்த்தெறிந்து ஜெயலலிதா அதிமுக பொதுச்&zwnj; செயலாளராகப் பொறுப்பேற்றுக்&zwnj; கொண்டு, நான்கு முறை தமிழ்நாட்டில்&zwnj; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழக ஆட்சியை அமைத்தார்&zwnj;. தொட்டில்&zwnj; குழந்தைத்&zwnj; திட்டம்&zwnj;, அனைத்து மகளிர்&zwnj; காவல்&zwnj; நிலையம்&zwnj;, மகளிர்&zwnj; சுய உதவிக்&zwnj; குழுக்கள்&zwnj;, விலையில்லா அரிசி, கட்டணமில்லாக் கல்வி எனப்&zwnj; பல்வேறு மக்கள்&zwnj; நலத்&zwnj; திட்டங்களைச்&zwnj; செயல்படுத்தி சாதனை படைத்தார்&zwnj;.</p> <p>நாடாளுமன்ற மக்களவையில்&zwnj; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழகத்தை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவைச் சாரும்&zwnj;.</p> <p><strong>அதல பாதாளத்திற்கு சென்ற அதிமுக</strong></p> <p>அவரின் மறைவிற்குப்&zwnj; பிறகு, துரோகம்&zwnj; உள்ளே நுழைந்ததன்&zwnj; விளைவாக, அதர்மங்கள்&zwnj; அதிகரித்து துரோகச்&zwnj; செயல்கள்&zwnj; தாண்டவமாடி, கட்சி அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக்&zwnj; கூட்டத்தால்&zwnj; குழி தோண்டிப் புதைக்கப்பட்டதன்&zwnj; காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில்&zwnj; மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழகம்&zwnj; இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது.</p> <p>ஏழு மக்களவைத்&zwnj; தொகுதிகளில்&zwnj; டெபாசிட்&zwnj; இழப்பு, 32 தொகுதிகளில்&zwnj; மூன்றாவது இடம்&zwnj;, கன்னியாகுமரியில்&zwnj; நான்காவது இடம்&zwnj;, புதுச்சேரி யூனியன்&zwnj; பிரதேசத்தில்&zwnj; நான்காவது இடம்&zwnj; என படுதோல்வியை நடந்து முடிந்த மக்களவைத்&zwnj; தேர்தலில்&zwnj; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழகம்&zwnj; சந்தித்தது.</p> <p><strong>துரோகியை மக்கள்&zwnj; நம்பத்&zwnj; தயாராக இல்லை</strong></p> <p>இதன் மூலம்&zwnj;, முதலமைச்சர்&zwnj; பதவிக்கு பரிந்துரைத்தவர்&zwnj;, முதலமைச்சர்&zwnj; பதவியில்&zwnj; அமர்த்தியவர்&zwnj;, முதலமைச்சர்&zwnj; பதவியில்&zwnj; தொடர துணை புரிந்தவர்கள்&zwnj; என அனைவரையும்&zwnj; முதுகில்&zwnj; குத்திய துரோகியை மக்கள்&zwnj; நம்பத்&zwnj; தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.</p> <p>இந்தத்&zwnj; துரோகச்&zwnj; செயல்&zwnj; காரணமாக, ஜெயலலிதா ஆட்சிக்&zwnj; காலத்தில்&zwnj;&nbsp;45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி இன்று 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட &ldquo;துரோகம்&zwnj;&rdquo; தியாகத்தைப்&zwnj; பற்றி பேசுவது சாத்தான்&zwnj; வேதம்&zwnj; ஓதுவதுபோல்&zwnj; உள்ளது.</p> <p>இந்த நிலைமை நீடித்தால்&zwnj;, எத்தனை ஆண்டுகளானாலும்&zwnj; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழகம்&zwnj; ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல்&zwnj;, அதன்&zwnj; வாக்கு சதவீதம்&zwnj; குறைந்து கொண்டே செல்லும்&zwnj;. வெற்றிக்&zwnj; கனி என்பது எட்டாக்&zwnj; கனியாகிவிடும்&zwnj;.</p> <p>&ldquo;தினைத்துணை நன்றி செயினும்&zwnj; பனைத்துணையாகக்&zwnj;</p> <p>கொள்வர்&zwnj; பயன்தெரி வார்&zwnj;.&rdquo;</p> <p>அதாவது, தனக்கு செய்யப்பட்ட உதவி தினை அளவே ஆனாலும்&zwnj;, பண்புள்ளவர்கள்&zwnj; அதைப்&zwnj; பனை அளவுக்குக்&zwnj; கருதிக்&zwnj; கொள்வார்கள்&zwnj; என்கிறது திருக்குறள்&zwnj;.</p> <p><strong>பண்புள்ளவர்கள்&zwnj; தலைமைப்&zwnj; பதவிக்கு வர வேண்டும்&zwnj;</strong></p> <p>அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழகம்&zwnj; வீறுகொண்டு எழ வேண்டுமென்றால்&zwnj;, பிரிந்தவர்கள்&zwnj; ஒன்றிணைய வேண்டும்&zwnj;. பிரிந்தவர்கள்&zwnj; ஒன்றிணையவேண்டுமென்றால்&zwnj; பண்புள்ளவர்கள்&zwnj; தலைமைப்&zwnj; பதவிக்கு வர வேண்டும்&zwnj;. எப்படிப்பட்ட பாவத்தைச்&zwnj; செய்தவர்க்கும்&zwnj; அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. ஆனால் செய்&zwnj; நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம்&zwnj; இல்லை என்கிறார்&zwnj; திருவள்ளுவர்&zwnj;.</p> <p>&nbsp;எனவே, &ldquo;எனக்குப்&zwnj; பின்னாலும்&zwnj;, இன்னும்&zwnj; எத்தனை நூற்றாண்டுகள்&zwnj; வந்தாலும்&zwnj;, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழகம்&zwnj; மக்களுக்காகவே இயங்கும்&zwnj;" என்ற ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்றிட, 2026ஆம்&zwnj; ஆண்டு சட்டமன்ற பொதுத்&zwnj; தேர்தலில்&zwnj; நாம்&zwnj; அனைவரும்&zwnj; ஒன்றிணைந்து களப்&zwnj; பணியாற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்&zwnj; கழகத்தை ஆட்சிக்&zwnj; கட்டிலில்&zwnj; அமர வைக்க உறுதி ஏற்போம்&zwnj;&rsquo;&rsquo;.</p> <p>இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article