திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் இன்று மாலை நடைபெறக்கூடிய சூரசம்கார நிகழ்ச்சியைக் காண்பதற்கு லட்சக்கணக்கானோர் வருகை புரிந்துள்ளனர். அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள பக்தர்கள், கடலில் நீராடி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். கந்தசஷ்டியையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.