திருச்சி அருகே அரசு பேருந்து - லாரி மீது மோதி விபத்து - 20 பேர் காயம்

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.&nbsp;</p> <p style="text-align: justify;">இந்நிலையில் சிறுகனூர் அருகே பேருந்து சென்றுக்கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக , முன்னே சென்று கொண்டு இருந்த மணல் லாரி மீது திடீரென பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மேலும் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.&nbsp;</p> <p style="text-align: justify;">அரசு பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;உடனடியாக அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விபத்து குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தடைந்தனர். பின்பு பேருந்தில் சிக்கி தவித்த பயணிகளை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.&nbsp;</p> <p style="text-align: justify;">நள்ளிரவில் அரசு பேருந்து மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/22/37a30274cab9c0fd42a60607f3437d721721624625118184_original.jpg" /></p> <p style="text-align: justify;">மேலும் இது குறித்து அப்பகுதி மக்களிடையே கேட்டபோது அவர்கள் கூறியது என்னவெனில், &ldquo;திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக திருச்சி அருகே சிறுகனூர், பாடாலூர் பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.</p> <p style="text-align: justify;">தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மிக அதிக வேகமாக செல்கிறது. அதேசமயம் பொதுமக்கள் சாலைகளை கடக்க வேண்டும் என்றாலே ஒரு அச்சத்துடன் கடப்பதாக தெரிவித்தனர்.&nbsp;</p> <p style="text-align: justify;">குறிப்பாக இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடைபெறுகிறது. சில சமயங்களில் உயிர் இழப்புகள் அதிகமாக நடந்துள்ளது. ஆகையால் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.&nbsp;</p> <p style="text-align: justify;">மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்காக நடவடிக்கை வேண்டும்.&nbsp;குறிப்பாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இரவு,பகலாக நேரமில்லாமல் , ஓய்வெடுக்காமல் பேருந்து இயக்கி வருகிறார்கள். இதனால் சில சமயங்களில் பேருந்துகள், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. ஆகையால் இவற்றை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.&nbsp;</p>
Read Entire Article