திடீரென இறந்த அப்பா.. டார்ச்சர் செய்த அக்கா.. விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

1 month ago 4
ARTICLE AD
<p>உத்தரப்பிரதேசத்தில் சகோதரி தொடர்ச்சியாக டார்ச்சர் செய்து மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்தால் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p> <p>உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கோஞ்ச் கோட்வாலி பகுதியில் உள்ள கோகலே நகரில் அவத் பிஹாரி பிரஜாபதி என்ற நபர் விவசாயியாக இருந்து வந்தார். இவருக்கு மீனு, ரோலி, நேஹா, ரக்&zwnj;ஷா என 4 மகள்கள் உள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரி 25ம் தேதி புற்றுநோய் காரணமாக பிஹாரி பிரஜாபதி உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.&nbsp;</p> <p>முன்னதாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகள் மீனு திருமணம் செய்த நிலையில், இரண்டாவது மகள் ரோலிக்கு கடந்த பிப்ரவரி 12ம் தேதி கான்பூரில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 3வது மகள் நேஹாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மார்ச் 14ம் தேதி எட்டாவாவில் திருமணம் நடப்பதாக இருந்தது. இளைய மகளான ரக்&zwnj;ஷா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இப்படியான நிலையில் தான் அவத் பிஹாரி பிரஜாபதி இறந்தார்.&nbsp;</p> <p>அப்பாவின் மரணம் நான்கு மகள்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய துயரத்தை உண்டாக்கியது. இப்படியான நிலையில் தான் 2வது மகள் ரோலி தன்னுடைய திருமணத்தை அவசரப்படுத்தியதாகவும், இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் சிகிச்சையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என நேஹா கடும் கோபமடைந்தார். இதுதொடர்பாக சகோதரிகள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் நேஹாவுக்கும் ரோலிக்கும் இடையே திங்கட்கிழமை சண்டை ஏற்பட்டுள்ளது.&nbsp;</p> <p>இந்த வாக்குவாதங்களால் மிகவும் மனமுடைந்த நேஹா அன்று இரவு வீட்டின் சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். நேற்று காலை குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது தான் இந்த சோக சம்பவம் நடந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் நேஹா உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்துக் கொண்ட இடத்தில் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் தனது சகோதரி மன ரீதியாக டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வருங்கால கணவரிடம் பெற்ற கடனுக்கு பதில் வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>அதேசமயம் வருங்கால கணவன் தன்னுடைய கடைசி தங்கையை திருமணம் செய்ய வேண்டும் என நேஹா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <p><strong>(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் &ndash; 1800 599 0019)</strong></p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/walk-45-minutes-daily-and-get-more-benefits-251805" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article