தாய், தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்த மகன்! என்ன காரணம்?

7 months ago 7
ARTICLE AD
<p>சொத்துக்காக தாய் தந்தையை மகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்பலநாயுடு. இவரது மனைவி ஜெயம்மா. இந்த தம்பதிக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கு சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது.</p> <p>இந்த நிலத்தை மகன் ராஜசேகர் விற்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.</p> <p>இதனால் பெற்றோருக்கும் மகனுக்குமிடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது. அதன்படி நேற்றும் பிரச்சினை வந்துள்ளது.</p> <p>ராஜசேகர் டிராக்டரை கொண்டு அந்த நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதையறிந்த அவரின் பெற்றோர் அப்பலநாயுடு மற்றும் ஜெயம்மா ராஜசேகரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p> <p>அப்போது இரு தரப்புக்குமிடையே கடும் வாக்குவாதமாகியுள்ளது. பேசி பேசி பிரச்சினை வளர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன் டிராக்டரில் ஏறி ஓட்ட முயற்சித்தார். அதற்கு பெற்றோர் குறுக்கே நின்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.</p> <p>கோபத்தில் ராஜசேகர் பெற்றோர் என்றும் பாராமல் அவர்கள் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் திகைத்து போனார்கள். இதையடுத்து ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.</p> <p>இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜசேகர் பெற்றோரை டிராக்டர் ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.</p> <p>இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய ராஜசேகரை தேடி வருகின்றனர்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article