"தமிழ்நாட்டில் சிறப்பா இருக்கே" மனம் திறந்து பாராட்டிய மத்திய அமைச்சர்.. கைகொடுத்த டிஆர்பி!

1 year ago 14
ARTICLE AD
<p>தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.</p> <p>சென்னையில் இன்று ஜவுளித்துறை, கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகங்களின் அலுவலர்களுடன் இத்துறையின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.</p> <p><strong>தமிழ்நாட்டை பாராட்டிய மத்திய அமைச்சர்:</strong></p> <p>சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில்&nbsp; நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</p> <p>முன்னதாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த கைத்தறி, கைவினைக் கலைஞர்களின் கண்காட்சி அரங்குகளையும் மத்திய அமைச்சர் பார்வையிட்டார். கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.</p> <p>ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர்,&nbsp;தமிழ்நாட்டில்,&nbsp;மத்திய அரசின் ஜவுளித்துறையின் திட்டங்களை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்துவதாக கூறினார்.&nbsp;</p> <p><strong>கிரிராஜ் சிங் பேசியது என்ன?</strong></p> <p>மேலும், இந்தியாவின் ஜவுளித்துறை தற்போது 176 பில்லியன் அமெரிக்க டாலர்&nbsp; சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது என்றும்,&nbsp;&nbsp;இது 2030-ம் ஆண்டு கிட்டத்தட்ட 350 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சந்தையாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p> <p>மேலும் தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய,&nbsp;&nbsp;மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி,&nbsp;சேலைகள் வெளிநாடுகளில் வாழும்&nbsp; இந்தியர்களால் விழாக்காலங்களில் பெரிதும் விருப்பத்தேர்வுககளாக&nbsp; உள்ளன என்றார் அவர்.</p> <p>ஓவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மக்கள்தொகை ஒரு ஆஸ்திரேலியா கண்டத்தின் அளவு அதிகரிப்பதாகவும்,&nbsp;அதற்கேற்ப நமது உள்நாட்டு ஜவுளித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு செயல்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p> <p>பின்னர், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஷன்நெக்ஸ்ட் ஆராய்ச்சிக் கூடத்தையும், இதர செயல்பாடுகளையும் பார்வையிட்டு அந்நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.</p> <p>அப்போது பேசிய அவர்,&nbsp;இந்நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் ஒன்று என்றும்,&nbsp;இந்நிறுவனத்தின் மாணவர்கள் படிப்பை முடித்து செல்லும்போது குறைந்தது 1000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனுள்ளவர்களாக மாறுகின்றனர் என்றும் தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article