தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!

1 year ago 7
ARTICLE AD
<p><span class="r-b88u0q">தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார்.</span></p> <p><span class="r-b88u0q">நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, </span><span class="r-b88u0q">'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' </span>என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், <span class="r-b88u0q">தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பாடப்பட்ட </span><span class="r-b88u0q">தேசிய கீதத்தில் 'திராவிடம்' என்று வரும் வரியை பாடிய போதிலும், தமிழ் தாய் வாழ்த்தில் வரும் வரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</span></p> <p><span class="r-b88u0q">இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் பதிவிடுகையில், </span>"ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="ta">ஆளுநரா? ஆரியநரா?<br /><br />திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!<br /><br />சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.<br /><br />இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு&hellip; <a href="https://t.co/NzS2O7xDTz">pic.twitter.com/NzS2O7xDTz</a></p> &mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1847245575684817318?ref_src=twsrc%5Etfw">October 18, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!</p> <p>திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article