தமிழகத்தில் 5, கேரளாவில் 3... எங்கெல்லாம் மழை? எச்சரிக்கும் வானிலை மையம்

11 months ago 11
ARTICLE AD
<p>கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை முடிந்தாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கேரளாவையும் விட்டுவைக்கவில்லை. பெரும்பாலான இடங்களில் மழை பெய்த வண்ணம் இருக்கிறது.&nbsp;</p> <p>இந்நிலையில், கேரளாவில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாளை கொல்லம், பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், &ldquo;நாளை, திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 24 மணிநேரத்தில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>கோமரின் பகுதியில் நிலைகொண்டுள்ள சூறாவளி சுழற்சியின் தாக்கத்தால் வரும் நாட்களில் இடி மின்னலுடன் மழை தொடர வாய்ப்புள்ளது. ஜனவரி 16ஆம் தேதி வரை கேரளாவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது&rdquo; என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/celebrities-who-have-jallikattu-bull-and-make-them-to-participate-in-jallikattu-212754" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p>தமிழகத்தை பொறுத்தவரை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பெருங்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.&nbsp;</p> <p>இன்று இரவு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.&nbsp;</p> <p>இதில் ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.&nbsp;</p>
Read Entire Article