தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வு

1 year ago 6
ARTICLE AD
<p><strong>தஞ்சாவூர்:</strong> தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் மாணவிக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.</p> <p><strong>குந்தவை நாச்சியார் கல்லூரியில் பொது கலந்தாய்வு</strong><br />&nbsp;<br />தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற முதல் பொது கலந்தாய்வில் &nbsp;பி.காம், பி.பி.ஏ., பாடத்திற்கான கலந்தாய்வில் 121 மாணவிகள் சேர்க்கை பெற்றனர். அதேபோல் அனைத்து அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வில் 24 பேர் சேர்க்கை பெற்றனர்.</p> <p><strong>பி.ஏ, தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கு 122 மாணவிகள் சேர்க்கை</strong></p> <p>பி.ஏ. தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கிலப் பாடத்திற்கான &nbsp;கலந்தாய்வில் 122 மாணவிகள் சேர்க்கை பெற்றனர். நேற்று 300 முதல் 400 கட் ஆப் மதிப்பெண் பெற்ற பி.ஏ வரலாறு மற்றும் பி.ஏ. பொருளியல் பாடத்திற்கு விண்ணப்பித்த மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.&nbsp;</p> <p>அனைத்து அறிவியல் பாடங்களுக்கும் விண்ணப்பித்த மாணவிகளில் 250 முதல் 339 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் வரும் 15ம் தேதி &nbsp;அனைத்துக் கலைப்பிரிவு மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.&nbsp;</p> <p><strong>கலந்தாய்வுக்கான அழைப்பு&nbsp;</strong></p> <p>கலந்தாய்வுக்கான அழைப்பு குறுஞ்செய்தி மின் அஞ்சல் வழியாக மாணவிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு இட ஒதுக்கீட்டின் கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் உட்பட 44 மாணவிகள் சேர்க்கை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p> <p>இரண்டாம் கட்ட பொதுக் கலந்தாய்வு 24ம் தேதி முதல் நடைபெறும். கல்லூரி கோடை விடுமுறைக்குப் பின் 19ம் தேதி கல்லூரி திறக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவிகளுக்கு ஜூலை 3 ஆம் தேதி &nbsp;வகுப்புகள் தொடங்கும். இத்தகவலை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தெரிவித்துள்ளார்.</p>
Read Entire Article