<p style="text-align: justify;">தஞ்சாவூர்: டிகிரி படித்தவர்களுக்கு தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு வந்துள்ளது. மாதம் ரூ.50,000 சம்பளங்க.</p>
<p style="text-align: justify;">மத்திய அரசின் தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தனிச் செயலாளர்கள் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் மாதம் வரை பெறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">தேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள 32 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.45 மற்றும் 50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.</p>
<p style="text-align: justify;"><strong>தனிச் செயலாளர் (Private Secretaries) 14</strong><br /><strong>சுருக்கெழுத்தாளர் (Stenographers) 18</strong> என மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p>
<p style="text-align: justify;">சென்னையில் தனிச் செயலாளர் பதவிக்கு 3 மற்றும் சுருக்கெழுத்தாளர் பதவிக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன. பெங்களூரில் தலா 1 இடமும், டெல்லியில் தனிச் செயலாளர் பதவிக்கு 3 இடங்களும் உள்ளன. இந்தூர், கட்டாக், அமராவதி, கவுகாத்தி, சண்டிகர், மும்பை, கொல்கத்தா மற்றும் ஜெய்பூர் ஆகிய இடங்களில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் மட்டுமின்றி ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.</p>
<p style="text-align: justify;">தனிச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயது இருக்க வேண்டும். சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 28 வயது இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அதிகபடியாக 62 வயது வரை இருக்கலாம்.</p>
<p style="text-align: justify;">இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வீதம் Dictation மற்றும் கணினியில் ஒரு நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற விதம் Transcription திறன் அவசியமாகும்.</p>
<p style="text-align: justify;">மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் சுருக்கெழுத்தராக மற்றும் தனி செயலாளராக 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்தாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.45,000 மற்றும் தனிச் செயலாளர் பதவிக்கு மாதம் ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்த முழு விவரம் இமெயில் மற்றும் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதார்கள் தொடர்பு எண்களை செயலில் வைத்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். திறன் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் முதலில் 1 வருடத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் 3 வருடங்கள் வரை அதிகரிக்கப்படலாம்.</p>
<p style="text-align: justify;">https://nclt.gov.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்டோபர் 8-ம் தேதியே கடைசி நாள் ஆகும். திறன் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்</p>
<p style="text-align: justify;">சுருக்கெழுத்து திறனுடன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் பட்டப்படிப்பு தகுதியுடன் அனுபவம் உள்ளவர்களுக்கு சிறப்பான வாய்ப்பாக அமைகிறது. </p>