டிகிரி முடிச்சவங்களா பாஸ் நீங்க... அட சூப்பர் வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருக்கு

1 month ago 2
ARTICLE AD
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: டிகிரி முடிச்சவங்களா பாஸ் நீங்க. அட சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருக்குங்க. ஆமாங்க வங்கியில் மேனேஜர் ஆக சூப்பர் சான்ஸ். விடாதீங்க. போனா வராது. கடைசி தேதி வரைக்கும் காத்திருக்காம இன்னைக்கே விண்ணப்பித்தை அனுப்பிடுங்க.<br />&nbsp;<br />பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, <strong>MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் பதவி</strong>க்கு 30 காலியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கு. டிகிரி முடித்த, 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இந்த வங்கி வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அப்புறம் என்ன உடனே விண்ணப்பத்தை தட்டி விட்டுடுங்க.</p> <p style="text-align: justify;">பஞ்சாப் அண்டு சிந்து வங்கியில் MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் தலைமையிடத்துடன் நாடு முழுவதும் 1,800 கிளைகள், 25 மண்டல அலுவலகங்களுடன் செயல்படும் இந்த பொதுத்துறை வங்கி, த<strong>ற்போது 30 காலியிடங்களை நிரப்ப உள்ளது.</strong> வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்துடன் உள்ளவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு. போட்டிகள் அதிகம் இருந்தாலும் உங்கள் திறமையை நிரூபித்தால் வெற்றி உங்களுக்குதானே. அதனால இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.</p> <p style="text-align: justify;">அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்க்கெட்டிங் அல்லது நிதி துறையில் எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், வணிக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் அல்லது கிரெடிட் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.</p> <p style="text-align: justify;">01.11.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 25 வயதும், அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும் &mdash; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p> <p style="text-align: justify;">இந்த வேலை வாய்ப்புக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ. 800 மற்றும் எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">ஆர்வமுள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான <strong>https://punjabandsind.bank.in/</strong> மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறும் செயல்பாடு கடந்த 5.11.2025ம் தேதியே தொடங்கிட்டாங்க. <strong>கடைசி தேதி வரும் 26.11.2025 ஆகும்.</strong></p> <p style="text-align: justify;">விண்ணப்பிப்பதற்கு முன் முழு அறிவிப்பையும் கவனமாக படித்து தகுதி மற்றும் நிபந்தனைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். டிகிரி முடித்தவர்களுக்கு இது ஒரு அருமையான வங்கி வேலை வாய்ப்பு தவற விடாதீர்கள்.&nbsp;</p>
Read Entire Article