“ஜூலை மலர்களே” பாடல்.. அதோட அர்த்தம் தெரியுமா? - இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பகிர்ந்த தகவல்!

1 month ago 5
ARTICLE AD
<p>பகவதி படத்தில் இடம்பெற்ற ஜூலை மலர்களே பாடல் உருவான விதத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷ் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.</p> <p>1996ம் ஆண்டு சரத்குமார் நடித்த மகாபிரபு படத்தின் மூலம் இயக்குநராக ஏ.வெங்கடேஷ் அறிமுகமானார். தொடர்ந்து விஜய், பிரசாந்த், சிலம்பரசன் டிஆர்., அருண் விஜய், அர்ஜூன் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்கள் இயக்கி மிகப்பிரபலமாக திகழ்ந்தார். தொடர்ந்து அங்காடி தெரு படத்தின் மூலம் நடிகராக எண்ட்ரீ கொடுத்தார். நடிப்பிலும் அவர் தொடர்ச்சியாக பாராட்டைப் பெற்று வருகிறார்.&nbsp;</p> <p>இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அளித்த நேர்காணல் ஒன்றில், &ldquo;நான் விஜயை வைத்து செல்வா, நிலாவே வா, பகவதி ஆகிய 3 படங்களை இயக்கினேன். செல்வா, நிலாவே வா படங்களை இயக்கியபோது அவரின் மார்க்கெட் நிலைமை மாறியிருந்தது. ஆனால் ஆள் மட்டும் மாறவேயில்லை. பகவதி பட சமயத்தில் விஜயின் கேரியர் வேற லெவலில் இருந்தது. இருந்தாலும் விஜயிடம் அந்த அமைதி அப்படியே இருந்தது. கோபம் வந்தாலும் காட்டாமல் இருப்பது, அதிகம் உணர்ச்சிவசப்பட்டாலும் வெளிக்காட்ட மாட்டார்&rdquo; என தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>தொடர்ந்து பகவதி படத்தில் இடம்பெற்ற ஜூலை மலர்களே பாடல் உருவான விதம் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதாவது அந்த பாடலை நா.முத்துக்குமார் எழுதினார். முதலில் ஜூலை மலர்களே என்ற வார்த்தைக்கு பதிலாக ரோஜா மலர்களே என்ற வார்த்தைதான் இடம் பெற்றிருந்தது. அதனை நான் பார்த்து விட்டு ரோஜா மலர்களே என்ற வார்த்தை மிகவும் சாதாரணமாக உள்ளது என சொன்னேன்.</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="ta">ஜூலை மலர்களே 💜 <a href="https://t.co/OPvXACqOE5">pic.twitter.com/OPvXACqOE5</a></p> &mdash; Vijay Karthikeyan (@Vijay_Karthik27) <a href="https://twitter.com/Vijay_Karthik27/status/1675053732676112385?ref_src=twsrc%5Etfw">July 1, 2023</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>அதற்கு நா.முத்துக்குமார், ரோஜா சாதாரணமான வார்த்தையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் மலர்களிலேயே மிகவும் அழகானது ரோஜா தான் என அவர் விளக்கமளித்தார். அதனால் ரோஜாவிடம் சொல்வது போல உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாய் என்ற வார்த்தை இடம்பெற்றதாக சொன்னார். நான் இல்லை கவிஞரே ரோஜாவை வைத்து ஏகப்பட்ட பாட்டு வந்து விட்டதே என சொன்னேன். அதற்கு நா.முத்துக்குமார் இப்படி வேண்டுமானால் நாம் வைத்துக் கொள்ளலாம்.&nbsp;</p> <p>ரோஜா மலர்கள் அதிகம் மலரும் காலமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை உள்ளது. அதனால் ஜூலை மலர்களே என்ற வார்த்தையை தேர்வு செய்ய எனக்கு அது ரொம்ப பிடித்துப் போனது. பின்னாளில் அந்த பாட்டு மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இன்றளவும் பிரபலமாக உள்ளது&rdquo; என தெரிவித்தார்.</p> <p>பகவதி படத்தில் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, ரீமாசென், வடிவேலு, ஆஷிஷ் வித்யார்த்தி,மோனிகா, ஜெய் என பலரும் நடித்திருந்தனர். இப்படம் சாக்லேட் பாயாக இருந்த விஜயை ஆக்&zwnj;ஷன் பாதையில் பயணிக்க அடித்தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்க்கது.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/best-time-to-consume-chia-seeds-for-weight-loss-details-here-252128" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article