ஜாமினில் ரிலீஸ்... செந்தில்பாலாஜி திருவுருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்த தொழிலதிபர்

1 year ago 7
ARTICLE AD
<p><strong>முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் கரூரைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் தொகை முருகன் 5 ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்தார். மேலும், செந்தில்பாலாஜி திருவுருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர்.&nbsp;</strong></p> <p>&nbsp;</p> <p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/27/a27cc46cecc034f6123f4fbdc749429f1727448501328113_original.jpeg" /></strong></p> <p>&nbsp;</p> <p>சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை பிணையில் &nbsp;வெளியே வந்தார். இதைக் கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட திமுகவினர் பல இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதன் தொடர்ச்சியாக கரூர் அடுத்த செம்படாபாளையத்தில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர் தோகை முருகன் என்பவர் பொதுமக்கள் &nbsp;5 ஆயிரம் பேர்களுக்கு பிரியாணி வழங்கி விருந்து அளித்தார்.</p> <p>&nbsp;</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/27/cb9b5c89f8c0c043d00e06b85c6415371727448526786113_original.jpeg" /></p> <p><br />இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் நான் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார். முன்னதாக ஜாமீனில் வெளிவந்த <a title="செந்தில் பாலாஜி" href="https://tamil.abplive.com/topic/senthil-balaji" data-type="interlinkingkeywords">செந்தில் பாலாஜி</a> படத்திற்கு பூக்கள் தூவியம் பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர். இதற்காக,1500 கிலோ சிக்கன், 5000 முட்டை, 750 கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டு பொட்டலமாக கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 10 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. &nbsp; &nbsp;</p> <p>&nbsp;</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/27/e582ce7ec6890f6aaf21d2215e23a91b1727448550578113_original.jpeg" /></p> <p>செம்மடாம்பாளையத்தை சேர்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிரியாணி பொட்டலங்களை வாங்கிச் சென்றனர். தொழிலதிபர் தோகை முருகன், கொரோனா தொற்று காலத்தில் துப்புரவு பணியாளர்கள் &nbsp;பாத பூஜை செய்து அவர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி அவர்களை கெளரவப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு மாதம் பொதுமக்களுக்கு தினசரி கலவை சாதம் அன்னதானமாக வழங்கினார்.</p> <p>&nbsp;</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/27/20c5ef132bc39a6d5d6b8ffcce36c9e61727448572821113_original.jpeg" /></p> <p>இதைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி பிணையில் வெளியே வந்த்தைக் &nbsp;கொண்டாடும் வகையில் 5000&nbsp; பேர்களுக்கு பிரியாணி வழங்கினார் &nbsp;என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article