<p style="text-align: left;"><strong>நிலம், சொந்த வீடு கனவுகள்</strong></p>
<p style="text-align: left;">சாதாரண மனிதர் முதல் சாமானியர் வரை அனைவரின் விருப்பமும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதாகும். மாதா மாதம் வாடகை தரும் பிரச்சனை , அடிக்கடி வீடு மாறும் பிரச்சனை இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்காதவர்களே இருக்க முடியாது. சொந்த வீடு என்பது சவால் விடும் அளவுக்கு கடினமான செயலே என்றாலும் , சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முயற்சியை யாரும் கைவிடுவதில்லை. சில பேர் சொந்தமாக வீடு கட்ட முடியவில்லை என்றாலும் காலிமனைகளாவது வாங்க வேண்டும் என்பது ஆசைபடுவதுண்டு. தமிழகத்தில் பல்வேறு , சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் காலி மனைகள் மற்றும் வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகின்றது. </p>
<p style="text-align: left;"><strong>உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம்</strong></p>
<p style="text-align: left;">தமிழகத்தில் தேவை அதிகரித்துள்ளதால் , அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் கட்டுமான நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதனால் சிறப்பான வடிவமைப்பு விலையில் சலுகை சிறப்பு பரிசுகள் என்ற ரீதியில் இருந்த தொழில் போட்டி ஒரு கட்டத்தில் சிறப்பு வசதிகளை பட்டியலிடும் முறைக்கு மாறியது.</p>
<p style="text-align: left;"><strong>மக்கள் தவிக்கும் நிலை</strong></p>
<p style="text-align: left;">ஆரம்பத்தில் இந்தப் பட்டியலில்10 முதல் 30 வகை வசதிகள் இடம் பெற்றன. நீச்சல் குளம் , உடற்பயிற்சி கூடம் போன்றவை அதில் பிரதான இடம் பிடித்தன. தற்போது கூடுதல் வசதிகள் பட்டியல் 150 முதல் , 250 வரை நீண்டுள்ளது. இந்த வசதிகள் எல்லாம் தேவையா என்பதை கூட 150 அறிய முடியாமல் , மக்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.</p>
<p style="text-align: left;"><strong>புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு</strong></p>
<p style="text-align: left;">குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அதிக வசதிகள் குறித்த பட்டியலை வெளியிடும் போது , நடுத்தர மற்றும் சிறிய கட்டுமான நிறுவனங்களின் திட்டங்கள் ஓரங்கட்டப்படும் சூழலும் உருவாகிறது. இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு புகார்கள் குவிந்தன. எனவே கட்டுமான நிறுவனங்கள் தங்கள் திட்டங்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திட்டங்கள் குறித்த வெளியிடுகளில் , சிறப்பு வசதிகள் குறித்த நீளமான பட்டியல் இடம் பெறக் கூடாது. இந்த தடையால் கட்டுமான நிறுவனங்கள் , சிறப்பு வசதிகள் குறித்து போட்டி போட்டு பட்டியல் வெளியிடுவது முடிவுக்கு வந்துள்ளது. எனினும் தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரியல் எஸ்டேட் ஆணையத்திடம் கட்டுமான நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.</p>