<p>தமிழ்நாட்டில் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் இருப்பதாக வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது”வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.</p>
<p>சென்னையில், நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க கூடும் எனவும், வரும் 15 ஆம் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் , வரும் 16 ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. </p>
<h2><strong><span style="color: #2dc26b;">இன்று மழை பெறும் மாவட்டங்கள்:</span></strong></h2>
<p>தஞ்சாவூர், திருவாரூர், மதுரை,தேனி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது</p>
<p> </p>