சென்னை மாநகராட்சிக்கு சிக்கல் ! ஆக்கிரமிப்பு தகவலில் குளறுபடி , தகவல் ஆணையம் கடும் கண்டனம்

2 months ago 5
ARTICLE AD
<p><strong>ஆக்கிரமிப்பு தகவலில் தவறான தகவல் கொடுத்ததால் , தகவல் ஆணையம் சென்னை மாநகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது</strong></p> <p>சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் புகழ் பாலன். இவரது பாட்டி அமிர்தம்மாள் வீட்டை போலி ஆவணங்கள் வாயிலாக, வாடகைதாரர் அபகரித்து கொண்டதோடு, சொத்து வரியிலும் பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2023ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் , சென்னை மாநகராட்சியிடம் , புகழ்பாலன் விளக்கம் கேட்டிருந்தார். மனு மீதான தினசரி முன்னேற்ற அறிக்கை மற்றும் ஆவண நகல்கள் உள்ளிட்ட 12 தகவல்களை கோரியிருந்தார். தகவல் கிடைக்காததால் மேல் முறையீடு செய்தார்.</p> <p><strong>இம்மனு மீதான விசாரணையில் , மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவில் ;&nbsp;</strong></p> <p>ஆணையத்தின் முன் உள்ள ஆவணங்களை பரிசீலித்ததில் , மனுதாரரின் மனுவிற்கும் , முதல் மேல்முறையீட்டு மனுவிற்கும், சென்னை மாநகராட்சி எந்த தகவலையும் அளிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே அப்போதைய ஐந்தாவது மண்டலம் பொதுத் தகவல் அலுவலரும் , தற்போதைய கோடம்பாக்கம் மண்டல வருவாய் பிரிவு அதிகாரியுமான பிரகாஷ் ,&nbsp; அப்போதைய மேல்முறையீட்டு அலுவலரும் , தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளருமான தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 தினங்களுக்குள் அளிக்க வேண்டும்.</p> <p>இருவரிடமும் தற்போதைய பொதுத் தகவல் அலுவலர் விளக்கம் கேட்டு , வரும் 6 - ம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் , மனுதாரருக்கு இனவாரியான பதில்களை அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார். மனுதாரரோ தனக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை. ஆவணங்களின் நகல்கள் அளிக்கப்படவில்லை என்றார்.</p> <p>எனவே ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் , மனுதாரரின் மனுவை சரியாக படித்துப் பார்த்து , சரியான திருத்திய ஆவணங்களின் அடிப்படையில் , இன வாரியான தகவல்கள் மற்றும் நகல்களை, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தகவல்களை மனுதாரர் பெற்றதற்கான தபால் சான்றின் நகலை , ஆணையத்தில் நேரடியாக ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.</p>
Read Entire Article